close
Choose your channels

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா? முழுமையான தகவல்!

Monday, January 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாகப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

அதன்படி 300 மாடுபிடி வீரர்களைக் கொண்டு போட்டிகள் நடத்தலாம்.

முன்னதாகப் போட்டிகளில் கலந்துகொள்ளும் காளைமாடுகள், வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். தற்போது கொரோனாவை கருத்தில் கொண்டு காளைகள், வீரர்கள் என இருவருக்குமே 3 நாட்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம்.

இந்த ஆன்லைன் விண்ணப்ப நடைமுறையானது இ-சேவா மையத்தில் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்து உள்ளார்.

மேலும் போட்டிக்கு வரும் காளையுடன் 1 உரிமையாளர் மற்றும் உதவியாளர் மட்டுமே வரவேண்டும். அந்த இரண்டு நபர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதோடு 2 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு நெகடிவ் ரிசல்ட் வந்திருக்க வேண்டும்.

வீரர்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும். மேலும் அடையாள அட்டை இல்லாத நபர்கள் போட்டி நடத்தப்படும் இடங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு என அனைத்துப் போட்டிகளிலும் வெறும் 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மேலும் போட்டிகளில் கலந்துகொள்ளும் காளை மற்றும் வீரர்கள் அனைவரும் ஒரு போட்டியில் கலந்துகொண்ட பிறகு வேறு போட்டிகளில் கலந்துகொள்ளக்கூடாது.

ஒவ்வொரு போட்டியிலும் 700 காளைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்தப் போட்டிகளுக்கு உள்ளூர் பார்வையாளர்கள் யாரும் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டுமாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மேலும் வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் மதிய நேர உணவு மற்றும் தற்காலிக கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது மாநராட்சி தலைவர் தலைமையில் நடைபெறும் என்றும் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு போட்டிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.