அவதார் படத்தின் 2,3,4,5வது பாகங்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,April 23 2017]

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய 'அவதார்' திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூலை குவித்தது. $237 மில்லியன் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் $2.788 பில்லியன் வசூல் செய்தது.

மேலும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் 'அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்க முடிவு செய்து அதற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 'அவதார் 2' திரைப்படம் வரும் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதியும், 'அவதார் 3' திரைப்படம் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதியும், அவதார் 4' திரைப்படம் 2024ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதியும், 'அவதார் 5' திரைப்படம் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதியும் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாகங்களும் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டியே வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பவர்பாண்டி' தனுஷூக்கு வாழ்த்து கூறிய இருமேதைகள்

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயாசிங் நடித்த 'பவர்பாண்டி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.மேலும் இந்த படத்தை ரஜினிகாந்த் உள்பட கோலிவுட் பிரபலங்களும் பாராட்டி வருவதை ஏற்கனவே பார்த்தோம்...

அட்லியின் அடுத்த படத்தில் கமல்ஹாசன்

'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி, இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' என்ற வெற்றி படத்தை இயக்கியதோடு தற்போது 'தளபதி 61' படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது...

'விஸ்வரூபம் 2' படம் குறித்து கமல்ஹாசனின் முக்கிய அறிவிப்பு

உலகநாயகன் கமல்ஹாசனின் வெற்றி படங்களில் ஒன்றான 'விஸ்வரூபம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'விஸ்வரூபம் 2' படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஆரம்பித்துவிட்டதாக வெளிவந்த செய்தியை சமீபத்தில் பார்த்தோம். எனவே இந்த படம் வெகுவிரைவில் வெளியாக வாய்ப்புள்ள நிலையில் இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை கமல் தனது 

விவசாயிகள் போராட்டத்தில் நானும் பங்கேற்கவுள்ளேன். பிரபல நடிகை

தமிழக விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பல்வேறு நூதன முறையில் தலைநகர் டெல்லியில் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுகூட சிறுநீர் குடிக்கும் போராட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போராட்டத்தில் தானும் கலந்து கொள்ளவிருப்பதாக கடந்த 90களில் பிரபலமாக இருந்த நடி&

பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரஜினியின் அரசியல் போஸ்டர்

சமீபத்தில் பதவியேற்ற உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் தன்னலமற்ற, அதிரடியான நடவடிக்கைகளால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆரம்பத்தில் இவரது உடையை பார்த்து ஒரு மத அடையாளமுள்ள தலைவராக மக்கள் கருதினர். ஆனால் தற்போது அவரது நடவடிக்கை பிற மதத்தினர்களும் போற்றும் வகையில் உள்ளது. மேலும் தமிழ&