'அவதார்' படத்தின் அட்டகாசமான டீசர்: முதல் பாக வசூலை முறியடிக்குமா?

  • IndiaGlitz, [Tuesday,May 10 2022]

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’அவதார்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது .

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ’அவதார்’ படத்தின் முதல் பாகம் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. இந்த படம் உலகம் முழுவதும் 19 ஆயிரத்து 210 கோடி வசூல் செய்தது என்பதும் இந்த படத்தின் வசூலை இன்னும் எந்த படமும் முறியடிக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’அவதார்’ படத்தின் இரண்டாம் பாகமான ’அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ என்ற திரைப்படம் தற்போது உருவாகியுள்ளது. 160 மொழிகளில் உலகம் முழுவதும் வரும் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் வசூல் முதல் பாக வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

13 ஆண்டுகள் கழித்து ’அவதார்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் மூன்றாம் பாகத்தை 2024 ஆம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அனிருத் இசையில் முதல்முறையாக பாடிய கமல்ஹாசன்: வைரல் புகைப்படங்கள்!

உலகநாயகன் கமலஹாசன் ஏற்கனவே பல பாடல்கள் எழுதி பாடியுள்ள நிலையில் முதல் முறையாக அனிருத் இசையில் ஒரு பாடலை எழுதி பாடி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உறவினருடன் செல்பி எடுத்த மனைவி: ஆத்திரத்தில் கணவன் செய்த விபரீத செயல்!

 உறவினருடன் செல்பி எடுத்த மனைவி மீது கோபம் கொண்டு கணவன் செய்த விபரீத செயலால் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு 12 லட்சத்தில் வீடு கட்டு கொடுத்த பிரபல தொழிலதிபர்!

 கோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு பிரபல தொழிலதிபர் 12 லட்ச ரூபாய் செலவில் வீடு கட்டி கொடுத்துள்ளார் .

பிறந்த நாளில் சாய்பல்லவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்ஹாசன்!

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 51வது தயாரிப்பு திரைப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பதும் சிவகார்த்திகேயனின் 21வது படமாக

விக்னேஷ் சிவன் - நயன் தாரா திருமணத்தால் மன உளைச்சலுக்கு ஆளான நபர்: வருத்தத்துடன் பேட்டி!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணத்தால் மன உளைச்சலுக்கு ஆளானதாக விக்னேஷ் சிவனின் உறவினர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.