close
Choose your channels

மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் பணிபுரியும் 'அவதார்' குழுவினர்!

Monday, June 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் ‘அவதார்’ குழுவினர் பணிபுரிய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

மகேஷ்பாபு ராமராகவும் தீபிகா படுகோன் சீதையாகவும் ஹிருத்திக் ரோஷன் ராவணனாகவும் நடிக்க இருக்கும் திரைப்படம் ’ராமாயண்’. இந்திய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம் கதையை தமிழ் தெலுங்கு இந்தி உள்பட இந்தியாவின் பல மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ 500 கோடி என்று கூறப்படுகிறது

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மிக அதிகமாக கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும் என்பதும் 3டியில் தயாராகும் இந்த படம் இந்திய திரையுலகில் ஒரு சாதனை செய்யக்கூடிய படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் கிராஃபிக்ஸ், அனிமேஷன் காட்சிகளை உருவாக்க ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ‘அவதார்’ படத்தில் பணிபுரிந்த டெக்னாலஜி குழுவினர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் இந்திய திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நவீன டெக்னாலஜி உடன் உருவாகும் இந்த படம் ’அவதார்’ போல் உலகம் முழுவதும் வசூலை குவிக்குமா? என்பதி பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.