ரஜினி-ஷங்கரின் 'சிவாஜி' இரண்டாம் பாகமா? ஏவிஎம் சூப்பர் தகவல்

  • IndiaGlitz, [Sunday,August 14 2022]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் ’சிவாஜி’. இந்த திரைப்படம் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வசூலை அள்ளியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது என்பதும், 60 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூ.152 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ’தமிழ் ராக்கர்ஸ்’ என்ற தொடரை தயாரித்து உள்ள ஏவிஎம் நிறுவனம் ’சிவாஜி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது

ஏவிஎம் நிறுவனத்தின் அருணா குகன் ’தமிழ் ராக்கர்ஸ்’ புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியபோது ’சிவாஜி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் ஆனால் அதே நேரத்தில் சிறந்த திரைக்கதை அமையவேண்டும் என்றும் கூறியுள்ளார், இதனையடுத்து ரஜினிகாந்த் - ஷங்கர் இணையும் ’சிவாஜி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தம்பி ராமையா வீட்டை முற்றுகையிடுவேன்: நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு!

தம்பி ராமையா வீட்டை முற்றுகையிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தளபதி விஜய்யின் 'வாரிசு': படப்பிடிப்பு குறித்த மாஸ் தகவல்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இங்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்ததாகவும்

3 மடங்கு லாபம் கொடுத்த சூப்பர்ஹிட் படம்: ஷங்கருக்கு நன்றி சொன்ன சரத்குமார்!

 சரத்குமார் நடித்த சூப்பர்ஹிட் படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து அந்த படத்தின் மலரும் நினைவுகளை பகிர்ந்து உள்ள நடிகர் சரத்குமார், இயக்குனர் ஷங்கர் உள்பட படக்குழுவினர்களுக்கு

பிரிட்டிஷ் மகாராணி முன் பேசிய வசனம்: சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறிய கமல்!

 இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை நாடு முழுவதும் பொது மக்கள் கொண்டாடி வரும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் பிரிட்டிஷ் ராணியின் முன் சுதந்திரம் குறித்து பேசிய வசனத்தை

30 ஆண்டுகள் செய்தி வாசித்த பிரபலம் காலமானார்: பொதுமக்கள் இரங்கல்

அகில இந்திய வானொலியில் 30 ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசுவாமி காலமானார். அவருக்கு வயது 87.