close
Choose your channels

காதலியை கரம்பிடித்த பிரபல இந்தியக் கிரிக்கெட் வீரர்… வைரலாகும் புகைப்படம்!

Saturday, January 22, 2022 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்துவரும் அக்சர் படேல் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தனது நீண்டநாள் காதலியை கரம்பிடித்து இருக்கிறார். இதுகுறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியில் முன்னணி வீரராக இருந்து அக்சர் படேல் காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. அடுத்து நடைபெற இருக்கும் இலங்கை தொடரில் இவர் கலந்துகொள்வார் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் கடந்த வியாழக்கிழமை தன்னுடைய 28 ஆவது பிறந்தநாளை அவர் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார். மேலும் இதே பிறந்தநாள் விழாவில் தன்னுடைய நீண்டநாள் காதலி மோகவுடன் அவர் திருமண நிச்சயதார்த்தத்தையும் செய்துகொண்டுள்ளார்.

பிறந்தநாளின்போது காதலியை கரம்பிடித்த அக்சர் படேலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரிஷப் பண்ட், யுவேந்திர சாஹல், ஆர்.பி.சிங் போன்றோர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் குஜராத் அணியில் இருக்கும் பல கிரிக்கெட் வீரர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

ஐபிஎல் அணிக்காக டெல்லி கேபிடள்ஸ் அணியில் விளையாடிவரும் அக்சர் படேலை அந்த அணி தற்போது 9 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துள்ளது. மேலும் தற்போது நடைபெறும் ஏலத்தில் அதிக தொகைக்கு அவர் தக்கவைக்கப்படுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அக்சர் படேல் தன்னுடைய நீண்டநாள் காதலியை கரம்பிடித்து இருக்கும் தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.