close
Choose your channels

சூர்யா வாழ்த்திய சிறுவர்களுக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு!

Saturday, July 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவிடம் வாழ்த்து பெற்ற சிறுவர்களுக்கு தற்போது திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

சூர்யா, தமன்னா நடிப்பில் மறைந்த இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’அயன்’. கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் ரூ.15 கோடியில் தயாரான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.80 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ’பளபளக்குற பகலா நீ’ என்ற பாடலை அப்படியே அச்சு அசலாக கேரளாவை சேர்ந்த சிறுவர்கள் தங்களுடைய செல்போன் மூலமே படமாக்கினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து இந்த வீடியோவை பார்த்த சூர்யா, அந்த சிறுவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிலையில் அயன் படத்தில் ’பளபளக்குற பகலா நீ’ என்ற பாடலை ரீமிக்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட கேரள சிறுவர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அர்ஜுன், நிக்கி கல்ராணி முக்கிய வேடத்தில் நடிக்கும் ’வீருண்ணா’ என்ற மலையாளத் திரைப்படத்தில் இந்த சிறுவர்கள் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் இதனையடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.