கட்டி முடிக்கப்பட்டவுடன் அயோத்தி ராமர் கோவில் எப்படி இருக்கும்? வைரலாகும் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Tuesday,August 04 2020]

பல ஆண்டுகளாக ராமர் கோயில் பிரச்சினை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் விடிவு காலம் ஏற்பட்டது. இதனை அடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் முயற்சிகள் கடந்த சில மாதங்களாக எடுக்கப்பட்ட நிலையில் நாளை பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா ராமர் பிறந்த இடமான அயோத்தியில் நடைபெற உள்ளது.

இந்த பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மட்டுமின்றி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பல தலைவர்கள் இந்த பூஜையில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் ராமர் கோயில் உலகப்புகழ் பெற்ற வித்தியாசமான கட்டிடக்கலையில் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற வகையில் பார்த்து பார்த்து இந்த கோவிலின் டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டவுடன் எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கோயில் கட்டி முடித்தவுடன் அதன் கோபுரத்தில் காவிக்கொடி உடன் கம்பீரமாக இருக்கும் வகையில் உள்ள இந்த புகைப்படங்களை பலர் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் உள்பட முக்கிய பிரபலங்கள் நாளை அயோத்திக்கு வர உள்ளதை அடுத்து அயோத்தி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கலாம் என்பதால் கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை போலீசார் எடுத்துள்ளனர்.
 

More News

லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்!

'மாநகரம்' மற்றும் 'கைதி' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூன்றாவதாக தளபதி விஜய் படத்தை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பை பெற்றார்

'குட்டி ஸ்டோரி' பாடலுக்கு நடனம் ஆடிய 'பிகில்' நடிகை: வைரலாகும் வீடியோ

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு

கொரோனாவால் இருந்து குணமான தம்பதி தற்கொலை: அதிர்ச்சி காரணம்

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் உடல்நலத்தை பாதிப்பதோடு, பெரும்பாலானோர்களுக்கு மன உளைச்சளையும் ஏற்படுத்தி வருகிறது என்பது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம் 

பிக்பாஸ் தமிழ் நடிகை வெளியிட்ட ஹாட் வொர்க்-அவுட் வீடியோ

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தங்களது சமூக வலைதளங்களில் ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே

பிச்சையெடுத்து தொழிலதிபரான வாலிபர்: ரூ.1 லட்சம் கொடுக்க விரும்பும் ராகவா லாரன்ஸ்

தினந்தோறும் பிச்சை எடுத்து அதில் கிடைத்த பணத்தை செலவு செய்தது போல மீதமுள்ள பணத்தை சேமித்து வைத்து இன்று டீ விற்பனை செய்யும் தொழில் அதிபராக மாறியிருக்கும் இளைஞர் ஒருவரின் தன்னம்பிக்கையை பாராட்டி