மோகன்லாலின் 'த்ரிஷ்யம்' வசூலை வீழ்த்திய 'பாகுபலி 2'

  • IndiaGlitz, [Thursday,May 11 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் சாதனை வசூல் செய்து வருகிறது. இந்த படம் விரைவில் தமிழில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பக்கத்து மாநிலமான கேரளாவிலும் தனது சாதனையை தொடங்கிவிட்டது. கேரளாவில் இதுவரை அதிக வசூல் செய்த முதல் மூன்று படங்களும் மோகன்லால் நடித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடித்த 'புலிமுருகன்' ரூ.90 கோடியும் 'த்ரிஷ்யம்' ரூ.44 கோடியும், 'ஒப்பம்' ரூ.43 கோடியும், வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் 'பாகுபலி 2' திரைப்படம் கேரளாவில் ஒப்பம் மற்றும் த்ரிஷ்யம் படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளிவிட்டு ரூ.50 கோடி வசூலை நெருங்கி கொண்டிருக்கின்றது. மிகவிரைவில் 'புலிமுருகன்' வசூலையும் நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இளையதளபதியின் 'போக்கிரி 2': பிரபல தயாரிப்பாளர் அதிரடி முடிவு

இளையதளபதி விஜய், அசின் நடிப்பில் பிரபுதேவா இயக்கிய படம் 'போக்கிரி'. விஜய் நடித்த படங்களில் சூப்பர் ஹிட் ஆன படங்களில் ஒன்று

'விவேகம்' டீசர் சாதனை குறித்து Forbes பத்திரிகையில் செய்தி

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியான 'பாகுபலி 2' என்ற தென்னிந்திய திரைப்படம் உலகின் கவனத்தை ஈர்த்த நிலையில் நேற்று நள்ளிரவு வெளியான 'விவேகம்' படத்தின் டீசர் சாதனை மீண்டும் உலகையே தென்னிந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது

விஜய் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார்

பெரிய நடிகர்கள் மீது விளம்பரத்திற்காக அல்லது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக அவ்வப்போது நீதிமன்றத்தில் வழக்கு, காவல்துறையில் புகார் ஆகியவை நடைபெற்று வருவதுண்டு

ஓடி ஒளியவில்லை. சென்னையில்தான் இருக்கின்றார். நீதிபதி கர்ணன் வழக்கறிஞர் மனுதாக்கல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தா நீதிபதி கர்ணன் சர்ச்சைக்குரிய உத்தரவுகளை பிறப்பித்த நிலையில் அவரை மனநல சோதனைக்கு உட்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

22 வருடங்களுக்கு பின் 'அமிதாப்' கனவை நனவாக்கிய குஷ்பு

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான குஷ்பு தற்போது கணவர் மற்றும் மகள்களுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ளார்.