ரஜினி, அஜித் படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்த 'பாகுபலி'

  • IndiaGlitz, [Wednesday,April 05 2017]

கோலிவுட் திரையுலகில் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி மற்றும் தல அஜித்தின் 'என்னை அறிந்தால்' ஆகிய படங்கள் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் ரஜினி, அஜித் படங்களை அடுத்து எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக புக் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இம்மாதம் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள 'பாகுபலி 2' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றி, கட்டப்பாவின் ரகசியம், டிரைலருக்கு கிடைத்த உலகளாவிய வரவேற்பு ஆகியவை இந்த படத்தின் எதிர்பார்ப்புக்கு காரணமாக உள்ளது. சினிமாவே பார்க்காதவர்கள் கூட இந்த படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'பாகுபலி 2' படத்தை ரிலீஸ் செய்ய கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் முன்வந்துள்ளதால் தற்போதைய தகவலின்படி தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகள் புக் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம்.கீரவானி இசையமைத்துள்ளார். கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவில், வெங்கடேஸ்வரராவ் படத்தொகுப்பில் இந்த படம் சுமார் 200 கோடிக்கும் மேல் செலவு செய்து உருவாக்கப்பட்டுள்ளது.

More News

அஜித் பிறந்த நாளில் ஸ்பெஷல் காட்சியின் திட்டங்கள்

தல அஜித்தின் பிறந்தநாள் வரும் மே 1ஆம் தேதி வரவிருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் தற்போதே அட்வான்ஸாக பிறந்த நாள் கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டனர்...

இசை நிகழ்ச்சிக்கு சென்ற எஸ்.பி.பிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். இந்த நிகழ்ச்சிகளில் தனது பாடலை எஸ்பிபி பாடக்கூடாது என்று இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தெரிந்ததே.

மைனா கணவரின் தற்கொலைக்கு யார் காரணம்? கடிதத்தில் பரபரப்பு தகவல்

பிரபல தொலைக்காட்சி நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திகேயன் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது தற்கொலைக்கு காரணம் தெரியாமல் இருந்தது. ஆனால் சற்று முன்னர் தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதி வைத்த கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. இந்த கடிதத்தில் அவர் தற்கொலைக்கான காரணத்தை எழுதியுள்ளதாகவும் தெரிகிறது.

மணிரத்னம்-கார்த்தியின் 'காற்று வெளியிடை'. திரை முன்னோட்டம்

கோலிவுட் திரையுலகில் சீனியர் இயக்குனர்கள் பலர் தற்போதைய இளைஞர்களின் டிரண்டுக்கு மாற முடியாததால் திரையுலகில் இருந்து ஒதுங்கிவிட்ட நிலையில் இன்னும் ஃபீல்டில் இருக்கும் ஒரே பழம்பெரும் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் மட்டுமே.

வைகோவுக்கு துணையாக விரைவில் ப.சிதம்பரம் சிறை செல்வார். ஹெச்.ராஜா

தேசத்துரோகம் குறித்து சமீபகாலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருபவர் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஹெச்.ராஜா என்பது அனைவரும் அறிந்ததே.