ஆறாவது வாரத்திலும் அசராமல் வசூல் செய்து வரும் 'பாகுபலி 2'

  • IndiaGlitz, [Monday,June 05 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகி ஆறாவது வாரமாக உலகின் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் உலகளாவிய வசூல் ரூ.1600 கோடியை தாண்டிவிட்ட நிலையில் சென்னையிலும் இந்த படம் அசைக்க முடியாத வசூலை பெற்றுள்ளது. ஆறாவது வாரத்திலும் சென்னையில் இந்த படம் 16 திரையரங்க வளாகங்களில் 118 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.32,89,560 வசூல் செய்துள்ளது. இந்த படத்திற்கு 75% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தது இந்த படத்திற்கு இன்னும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் செல்வாக்கு இருப்பதையும், மீண்டும் மீண்டும் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து வருகின்றனர் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் இந்த படம் சென்னையில் கடந்த ஏப்ரல் 28ல் இருந்து ஜூன் 4 வரை மொத்தம் ரூ.15,88,78,390 வசூல் செய்துள்ளது. அதேபோல் சென்னையில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் சேர்ந்து ரூ.17,94,59,660 வசூல் செய்துள்ளது. சென்னையின் நம்பர் ஒன் வசூல் படமாக விளங்கும் இந்த படத்தின் வசூலை முறியடிக்க பல ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.

More News

தேசிய விருது பெற்ற பட இயக்குனருடன் இணையும் உதயநிதி

பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் பிரியதர்ஷன் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் 'கோபுர வாசலிலே', 'சினேகிதியே', 'லேசா லேசா', 'காஞ்சிவரம்' உள்பட பல தரமான திரைப்படங்களை இயக்கியுள்ளார்...

பிரபல தயாரிப்பாளரின் பிறந்த நாள் விழாவில் விஜய்-சமந்தா

பிரபல இயக்குனர் ராம நாராயணன் அவர்கள் ஆரம்பித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே....

பாகிஸ்தானை பந்தாடிய போட்டியில் கிரிக்கெட் கடவுளை சந்தித்த தனுஷ்

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின....

இன்று முதல் சூப்பர் ஸ்டாருடன் இணைகிறார் விஷால்

கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உன்னிகிருஷ்ணன் இயக்கி வ&

லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல்: இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா?

இங்கிலாந்து நாட்டின் முக்கிய நகரமான மான்செஸ்டர் நகரில் சமீபத்தில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் அந்நாட்டு மக்கள் மீள முடியாத நிலையில் இன்று மீண்டும் லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்...