'பல்வாள்தேவன்' ராணாவுக்கு வலதுகண் பார்வை பறிபோனதா?

  • IndiaGlitz, [Wednesday,May 03 2017]

சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சாதனை வசூல் பெற்று வரும் 'எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்தில் பிரபாசுக்கு அடுத்தபடியாக ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் பல்வாள்தேவன் கேரக்டரில் நடித்த ராணாதான். அவருடைய வெறித்தனமான நடிப்பு, முறுக்கேறிய உடலமைப்பு ஆகியவையும் இந்த படத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று.

இந்நிலையில் படத்தில் பிரபாசுக்கு இணையாக உடல்வாகு பெற்றுள்ள ராணாவுக்கு வலது கண் தெரியாது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது. சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ராணா, தனக்கு 10 வயது இருக்கும்போதே வலது கண்ணில் குறை ஏற்பட்டதாகவும், அறுவை சிகிச்சை செய்த போதிலும் தன்னால் வலது கண்ணில் நிறத்தை மட்டுமே பார்க்க முடியும் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் வலது கண் பிரச்சனையை தவிர வேறு எந்த பிரச்சனையும் தனக்கு இல்லை என்றும், அதனால் தான் பல்வாள்தேவன் கேரக்டரில் முழு ஈடுபாட்டுடன் தன்னால் நடிக்க முடிந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

More News

நடிகை பாவனாவின் வித்தியாசமான திருமண திட்டம்

'சித்திரம் பேசுதடி,' 'அசல்', 'தீபாவளி' உள்பட பல படங்களில் நடித்த நடிகை பாவனா கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை வரும் அக்டோபர் மாதம் திருமணம் செய்யவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த தகவலை தற்போது நடிகை பாவனாவும் உறுதி செய்துள்ளார்...

பாபிசிம்ஹாவுக்கு கிடைத்த பதவி உயர்வு

கோலிவுட் திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் முன்னேறியது மட்டுமின்றி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் கடந்த 2012ஆம் ஆண்டு பெற்றவர் நடிகர் பாபிசிம்ஹா

சச்சின் நடிக்கும் 'யார் இவன்' ரிலீஸ் எப்போது?

சச்சின், ஈஷா குப்தா நடிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் த்ரில்லர் திரைப்படம் 'யார் இவன்', வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்...

தண்ணீர் பாட்டில் ரூ.50க்கு விற்றால் எப்படி ஜனங்க தியேட்டருக்கு வருவாங்க! லிவிங்ஸ்டன்

உதயநிதி ஸ்டாலின், ரெஜினா நடிப்பில் எழில் இயக்கிய 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக உள்ளது.

விஜய்சேதுபதியின் அடுத்த அவதாரம்

கோலிவுட் திரையுலகில் இன்றைய தேதியில் அதிக திரைப்படங்களில் நடித்து வருபவரும், ஒவ்வொரு வருடமும் அதிக திரைப்படங்களை ரிலீஸ் செய்வதும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மட்டுமே. இந்த பிசியான பணியிலும் அவர் அடுத்த அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்...