பிரபல நடிகைக்கு ஆலோசகராக விரும்பும் யோகா குரு ராம்தேவ் 

  • IndiaGlitz, [Tuesday,January 14 2020]

பிரபல நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் மாணவர்களின் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் என்பது தெரிந்ததே. தீபிகா படுகோனே இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததால் அவரது நடிப்பில் வெளியான ’சப்பக்’ என்ற படத்திற்கு சில பிரச்சினைகளும், அதே நேரத்தில் அந்த படத்திற்கு நல்ல விளம்பரமும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை தீபிகா படுகோனே தன்னை ஆலோசகராக நியமித்தால் அவருக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று பிரபல யோகா குரு ராம்தேவ் அவர்கள் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் நிலவும் சமூக அரசியல் பிரச்சினை குறித்து அவர் எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுப்பதற்கு முன்னால் தன்னிடம் ஆலோசனை பெற்றால் அவருக்கும் பிரச்சனை இருக்காது நாட்டுக்கும் பிரச்சனை இருக்காது என்று அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததையே யோகா குரு ராம்தேவ் மறைமுகமாக இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. யோகா குரு ராம்தேவின் வேண்டுதலை ஏற்று அவரை ஆலோசகராக தீபிகா படுகோனே நியமனம் செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் நீங்கள் இரண்டு பேர்தான்..! அமெரிக்கா ஈரானை வறுத்தெடுத்த கனடா பிரதமர்.

ஈரான், அணு ஆயுதங்கள் இல்லாத நாடாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், அங்கிருக்கும் பதற்றநிலைக்கு அமெரிக்காவின் நடவடிக்கைகளும் காரணமாகத்தான் இருக்கின்றன.

2020 ஆஸ்கர். 11 பிரிவுகளில் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட ஜோக்கர்..!

2020 ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் 'ஜோக்கர்', 'தி ஐரிஷ்மேன்', 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்', '1917' ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.

பொன்ராம் இயக்கும் அடுத்த படத்தின் புதிய அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம்

CAA – NRC - NPR – என்றால் என்ன? இது குறித்த ஒரு விரிவான பார்வை

CAA – இந்தியக் குடியுரிமைச் சட்டம்  (Citizenship Amendment Act). NRC – தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens). NPR -தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (National Population Register).

ஆணவத்தை அன்பில் எரி.. உனக்குள் கடவுளைத் தேடு.. நா.முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதைகள்..!

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன், பொங்கல் பண்டிகைக்காக கவிதை எழுதியுள்ளதைப் பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.