close
Choose your channels

ஈரோட்டில் பப்ஜிக்கு அடிமையான சிறுவன் உயிரிழப்பு… சோகச் சம்பவம்!!!

Tuesday, October 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான 16 வயது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஈராடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கள்ளிப்பாளையம் எனும் பகுதியில் அருண் எனும் 16 வயது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இவர் கடந்த சில வருடங்களாக பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி இருந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.

சமீபத்தில் இந்தியா-சீன எல்லை விவகாரம் தொடர்பாக சீனச் செயலிகள் பலவற்றிற்கு மத்திய அரசு தடைவித்தது. அதில் பப்ஜி விளையாட்டும் ஒன்று. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பப்ஜி விளையாட்டு விளையாட முடியாமல் அருண் தவித்து வந்ததாகவும் அதனால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து மனநல மருத்துவரிடமும் அருண் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த அவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.