தமிழ் சினிமாவின் இளம் ஹீரோவுக்கு பெண் குழந்தை: வைரலாகும் புகைப்படம்

  • IndiaGlitz, [Monday,August 03 2020]

தமிழ் சினிமாவின் இளம் ஹீரோக்களில் ஒருவரான நகுல் சமீபத்தில் தனது பிறந்த நாளன்று தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். விரைவில் தனது குடும்பத்தில் புது வரவை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த குழந்தையின் விரல் தன்னுடைய விரலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் நகுல் தனது நீண்ட நாள் காதலியான சுருதி பாஸ்கர் என்ற பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி திருமணம் செய்தார் என்பதும் இந்த திருமணத்திற்கு திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே

கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கரின் ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் ’மாசிலாமணி’ ’காதலில் விழுந்தேன்’ ’வல்லினம்’ ’நாரதன்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஐபிஎல் டி20 போட்டிக்களில் நேரத்தை மாற்றி புது அறிவிப்பு!!!

ஐபிஎல் டி20 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்டிஸில் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது என ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை!!! பாதிப்பு யார் யாருக்கு???

நாளை (ஆகஸ்ட் 4) வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்து உள்ளது.

2 நாட்களாக தொடர்ந்து பற்றியெறியும் காட்டுத் தீ… 20 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி அழிந்து நாசம்!!!

அமெரிக்காவின் கல்போர்னியா மாகாணத்தில் உள்ள ரிவர்சைட் கவுண்டி பகுதியில் உள்ள மலைகளில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதிய தொழில்நுட்பத்தால் குட்டிக்காடுகளை உருவாக்கி அசத்தும் சென்னை மாநகராட்சி!!!

மியாவாகி எனப்படும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காடு வளர்க்கும் முறைக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி குறித்து அமைச்சரின் முக்கிய தகவல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் தற்போது நடைபெற்று வரும் 7வது கட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி