close
Choose your channels

மரணம் அடைந்து அரை மணி நேரம் கழித்து திடீரென உயிர்த்தெழுந்த பிறந்த குழந்தை!

Monday, September 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரிட்டனில் பிறந்த குழந்தை ஒன்று இறந்து அரை மணி நேரத்துக்கு பின்னர் திடீரென உயிர் பெற்று எழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிரிட்டனை சேர்ந்த 25 வயது அலெக்ஸ் கெல்லி என்ற நிறைமாத கர்ப்பிணி டெலிவரிக்கு முன்னர் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற போது அவரது வயிற்றில் உள்ள குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதனால் குழந்தையை உடனே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்காவிட்டால் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து என்பதை புரிந்து கொண்டு உடனே அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

ஆனால் அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்த குழந்தை பேச்சு, மூச்சின்றி இருந்தது. அழுகையும் இல்லை என்பதால் குழந்தை இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஆனால் குழந்தை பிறந்து சரியாக 28 நிமிடங்கள் கழித்து திடீரென குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இதனால் ஆச்சரியம் அடைந்த மருத்துவர்கள் உடனடியாக ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். குழந்தையின் பாதுகாப்பிற்கு இன்குபேட்டரிலும் வைக்கப்பட்டது. தற்போது அந்த குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிறந்த குழந்தை 28 நிமிடங்கள் பேச்சு, மூச்சு மற்றும் அழுகை எதுவும் இன்றி பின்னர் திடீரென உயிர் பெற்றது மருத்துவ உலகில் பெரும் அதிசயமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.