close
Choose your channels

லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் திரையிடப்பட்ட ஒரே இந்திய படம்

Sunday, October 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் எம்.எம்.கீரவாணி இசையில் உருவான பாகுபலி’ திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

ரூ.250 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1800 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பல விருதுகளையும் பல பெருமைகளையும் பெற்ற நிலையில் நேற்று லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் திரையிடப்பட்டது.

5267 இருக்கைகள் கொண்ட இந்த மாபெரும் ஹாலில் திரையிடப்பட்ட ஒரே இந்திய படம் மட்டுமின்றி ஆங்கிலம் அல்லாத வேறொரு மொழி திரையிடப்படுவதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் உள்ள ஆல்பர்ட் ராயல் ஹாலில் ‘பாகுபலி’ திரையிடப்படுவதை அடுத்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி, பிரபாஸ், அனுஷ்கா, ராணா உள்ளிட்டோர் லண்டன் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.