ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளதை அடுத்து ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளது.

ஜப்பானில் நடைபெற்றும் வரும் ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே இந்தியாவுக்கு 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று மல்யுத்தம் 65 கிலோ எடை பிரிவில் கஜகஸ்தான் வீரர் நியாஸ்பெகோ மற்றும் இந்தியாவின் பஜ்ரங் புனியா ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடந்த நிலையில் 8-0 என்ற கணக்கில் மிக எளிதில் கஜகஸ்தான் வீரர் நியாஸ்பெகோவை இந்திய வீரர் பஜ்ரங் புனியா வென்றார். இதனை அடுத்து அவருக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் 6வது பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தன்னை தோற்கடித்த நியாஸ்பெகோவை டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

மனித பற்கள்....! வித்தியாசமான தோற்றுத்துடன் இருக்கும் ஆட்டுத்தலை மீன்.....!

வித்தியாசமான தோற்றம் மற்றும் மனித பற்களைக் கொண்ட மீன் ஒன்று அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.

நானி சகோதரி இயக்கம்....! ஆந்தாலஜியில் களமிறங்கும் சத்யராஜ்...!

நடிகர் நானி தயாரிக்கவுள்ள புதிய திரைப்படத்தில், சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

முதல்முறையாக இணையும் விஜய்-செல்வராகவன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிக்கும் படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இணைந்திருப்பதாக  அதிகாரபூர்வமாக அறிவித்துக்கப்பட்டுள்ளது.

அரசியல் சூரியனில் ஆழம் பதித்த கலைஞர் கருணாநிதியின் நினைவுதினம் இன்று…

50 வருடத்திற்கும் மேலாக திமுக கழகத்தைக் கட்டிக் காத்தவர், 5 முறை தமிழக முதலச்சராகப் பதவி வகித்தவர்,

லாரி டிரைவர்களுக்கு விருந்து வைத்த ஒலிம்பிக் வீராங்கனை… கண்ணீர் சிந்த வைக்கும் காரணம்!

டோக்கியோ ஒலிம்பிக் 2021 இல் இந்தியாவிற்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு.