பாலா-துருவ் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Wednesday,December 13 2017]

சீயான் விக்ரம் மகன் துருவ், தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'அர்ஜூன்ரெட்டி' படத்தின் ரீமேக்கில் அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் வர்மா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'வர்மா' படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் ஆரம்பமாகும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் துருவ் ஜோடியாக நடிக்க நாயகியை இயக்குனர் பாலா தேடி வருவதாகவும், நாயகி முடிவு செய்த பின்னர் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் இன்னொரு புதிய ஸ்டில்லை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 

More News

உதயநிதியின் அடுத்தபடம் குறித்த அறிவிப்பு

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய உதயநிதி ஸ்டாலின் நடித்த 'இப்படை வெல்லும்' சமீபத்தில் வெளியாகிய நிலையில் அவர் தற்போது 'நிமிர்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அமெரிக்க நேரப்படி ரஜினிக்கு வாழ்த்து கூறிய கமல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளையொட்டி நேற்று அவரது ரசிகர்களும், ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும், அரசியல்வாதிகளும், ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

'அருவி'யை கொண்டாடும் பத்திரிகையாளர்கள்

ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், புதுமுகம் ஆதித்திபாலன் நடிப்பில் அறிமுக இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள திரைப்படம் 'அருவி'.

துணை முதல்வர் ஓபிஎஸ் இடம் ஆசி பெற்ற நட்சத்திர தம்பதி

சமீபத்தில் கவியரசர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனுக்கும் வினோதினிக்கும் திருமணம் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த திருமணத்தில் திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தது.

ரிலீசுக்கு முன்பே 'வேலைக்காரன்' படத்தை பார்த்து பாராட்டிய அதிகாரிகள்

ஒரு திரைப்படம் வெளியாகும் முன்னர் படக்குழுவினர்களை தவிர அந்த படத்தை பார்ப்பது சென்சார் அதிகாரிகள் மட்டுமே. பொதுவாக சென்சார் அதிகாரிகள் தங்கள் கடமையின் பொருப்பு கருதி படத்தை விமர்சனம் செய்வதோ,