இயக்குனர் பாலாஜி மோகனின் சஸ்பென்ஸ் தகவல் இதுதான்

  • IndiaGlitz, [Saturday,June 03 2017]

கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு 'மாரி' இயக்குனர் பாலாஜி மோகன் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று மாலை வெளியிடவுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார் என்பதை பார்த்தோம். 'மாரி 2' திரைக்கதையை அவர் எழுதி கொண்டிருப்பதால் இந்த தகவல் 'மாரி 2' குறித்ததாக இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பாலாஜி மோகன் வெப் சீரியல் ஒன்றை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். 'As I am Suffering from Kadhal' என்ற தலைப்பில் உருவாகவுள்ள இந்த சீரியல் விரைவில் தனியார் வெப் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்த சீரியலின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளதாகவும் இயக்குனர் பாலாஜி மோகன் அறிவித்துள்ளார். கதை, திரைக்கதை, தயாரிப்பு மற்றும் இயக்கம் ஆகிய பணிகளை பாலாஜி மோகன் ஏற்றுள்ள நிலையில் இந்த வெப் சீரியலுக்கு சதீஷ் ரகுநாதன் என்பவர் இசையமைக்கின்றார். பாலாஜி மோகனின் இந்த புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

More News

தனுஷ்: இளவயது ராஜ்கிரணை அடுத்து இளவயது ரஜினி?

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பவர்பாண்டி' திரைப்படம் 50வது நாளை கடந்து வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் பவர்பாண்டி கேரக்டரில் நடித்த ராஜ்கிரணின் இளவயது கேரக்டரில் தனுஷ் நடித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே...

ஸ்பைடர்: டீசரில் பெற்ற வெற்றியை திரையிலும் பெறுமா?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்பைடர்' திரைப்படம் வரும் தசரா திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது...

தியாக செம்மல் தினகரனே வருக வருக! அப்ப காந்தி, காமராஜர் எல்லாம் யார்?

சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையனை எதிர்த்து சிறை சென்ற காந்தி, காமராஜர் போன்ற தியாக செம்மல்கள் விடுதலையானபோது கூட இந்த வரவேற்பு இருந்திருக்குமா? என்பது சந்தேகம் தான்...

சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் எப்போது?

காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக பதவி உயர்வு பெற்ற சந்தானம் 'தில்லுக்கு துட்டு', 'இனிமே இப்படித்தான்' போன்ற படங்களை அடுத்து தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'சர்வர் சுந்தரம். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது சென்சாருக்கும் அனுப்பியாகிவிட்டது...

சன்னிலியோனுக்கு கிடைக்கும் மரியாதை கூட எனக்கு இல்லை. வேலுபிரபாகரன்

பிரபல இயக்குனர் வேலுபிரபாகரன் இன்று நடிகை ஷெர்லியை திருமணம் செய்த நிலையில் அவர் அளித்த பரபரப்பான பேட்டி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த பேட்டியில் இன்றைய காலத்தில் ஆபாசம் அனைவரின் கையில் உள்ளது என்றும், ஆபாச படங்களையும் நாம் இயக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்...