பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்! மகள் விஷயத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

  • IndiaGlitz, [Wednesday,April 24 2019]

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடியனாக நடித்து பிரபலமானவர் தாடி பாலாஜி. தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும், மற்றொரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருக்கிறார்.

நடிகர் தாடி பாலாஜிக்கும், அவருடைய மனைவி நித்யாவிற்கும் கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. மனைவியை விட்டு பிரிய மனம் இல்லாத தாடி பாலாஜி, நித்யா பிக்பாஸ் சீசன் 2 , நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை அறிந்து... அவரும் கலந்து கொண்டு நித்யாவை சமாதானம் செய்ய முயன்றார்.

மேலும், இவர்களுடைய மகள் போஷிகா இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என விருப்பம் தெரிவித்ததால், பாலாஜியுடன் சேர்ந்து வாழ நித்யா ஒப்புக்கொண்டாலும், 100 நாட்களுக்கு பிறகு தான், அவரை ஏற்றுக்கொள்வேன் என வெளிப்படையாகவே தெரிவித்தார்.

எனினும் மீண்டும் இவர்கள் இருவருக்குள்ளும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு காவல் நிலையம் வரை சென்றது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில், மகள் போஷிகாவை பார்க்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தாடி பாலாஜி வழக்கு தொடுத்திருந்தார். விசாரணையில், வாரம் ஒரு முறை பாலாஜி அவரது மகளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் தனக்கு நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கிடைத்துள்ளதாகவும், வாரம் ஒரு முறை என் அம்மா வீட்டில் மாலை 3:00 முதல் 4:00 மணி வரை என் மகளை பார்க்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது என தாடி பாலாஜி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

More News

தமிழக தங்கமகள் கோமதிக்கு தலைவர்கள் வாழ்த்து

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தயம் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார்.

கடற்கரை டூ கடற்கரை: சென்னையில் முதல் சுற்றுவட்ட ரயில் சேவை தொடக்கம்

சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரைக்கு செல்லும் சுற்றுவட்ட ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சியில் ஒரு 'கனா' கெளசல்யா: குவியும் பாராட்டுக்கள்

தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து இன்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 800 போட்டியில் தங்கம் வென்றார்.

நடிகர் ஸ்ரீகாந்த் ஓட்டு போடவில்லை: தேர்தல் அதிகாரி அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்றபோது வாக்காளர் பட்டியலில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி பெயர் இல்லாததால்

சிவகார்த்திகேயனை ஓட்டு போட அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை!

தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் மட்டும் போதாது. ஒருவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால் மட்டுமே அவர் வாக்களிக்க முடியும்.