close
Choose your channels

பாலுமகேந்திரா உதவி இயக்குனரின் 'அழியாத கோலங்கள்'

Saturday, January 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கேமரா மேதையும் இயக்குனருமான பாலுமகேந்திரா தமிழில் இயக்கிய முதல் திரைப்படம் 'அழியாத கோலங்கள்'. கடந்த 1979ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் பிரதாப்போத்தன், ஷோபா உள்பட பலர் நடித்த்ருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இதே பெயரில் மீண்டும் ஒரு படத்தை பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த எம்.ஆர்.பாரதி இயக்கவுள்ளார். இவர் ஒரு பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


தனது குருவுக்கு மரியாதை தரும் வகையில் இந்த படத்திற்கு 'அழியாத கோலங்கள்' என்ற டைட்டில் வைத்திருப்பதாகவும் மற்றபடி தனது குருவின் 'அழியாத கோலங்கள்' படத்தின் தொடர்ச்சியோ அல்லது ரீமேக்கொ இந்த படம் இல்லை என்றும் பாரதி விளக்கியுள்ளார்.

பாலுமகேந்திராவின் நாயகிகளான அர்ச்சனா, ரேவதி ஆகியோர்களுடன் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கின்றனர் ராஜேஷ் கே.நாயர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அரவிந்த் சித்தார்த்தா இசையமைக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் இசை வெளியீடு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.