close
Choose your channels

பள்ளி மாணவ, மாணவிகளின் பைகளில் ஆணுறை கருத்தடை மாத்திரைகள்: அதிர்ச்சியில் கல்வி அதிகாரிகள்

Wednesday, November 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பள்ளி மாணவ மாணவிகளின் புத்தக பையில் ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள் இருந்த சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவ மாணவிகளின் புத்தகப்பைகளில் செல்போன் இருக்கிறதா என்பதை சோதனை செய்யுமாறு கர்நாடக மாநில பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் கல்வித்துறை அதிகாரிகள் திடீரென பெங்களூர் நகரில் உள்ள ஒரு சில பள்ளிகளில் சோதனை செய்தனர். அப்போது எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பைகளில் ஆணுறைகள், மாணவிகளின் புத்தகப்பைகளில் கருத்தடை மாத்திரைகளும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் பல மாணவர்களின் புத்தகப் பையில் சிகரெட் உள்பட போதைப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கல்வித்துறையின் உத்தரவின் பெயரில் செல்போன் இருக்கிறதா என சோதனை நடத்தியபோது ஆணுறை, கருத்தடை மாத்திரைகள், சிகரெட் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து கவுன்சிலிங் வழங்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.