close
Choose your channels

நியூசிலாந்து துப்பாக்கி சூடு: நூலிழையில் உயிர்தப்பிய கிரிக்கெட் வீரர்கள்

Friday, March 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நியூசிலாந்து நாட்டில் சற்றுமுன்னர் மர்மநபர் ஒருவர் மசூதி ஒன்றில் புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூடு நடந்த பகுதியின் அருகில்தான் வங்கதேச கிரிக்கெட் அணியினர் தங்கியுள்ளனர். இந்த பகுதியில் உள்ள ஒரு மசூதியில் வங்கதேச வீரர்கள் தொழுகை நடத்தி வந்தனர். இவர்கள் தொழுகை நடத்திய மசூதிக்கு பக்கத்தில் உள்ள மற்றொரு மசூதியில் தான் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. எனவே வங்கதேச கிரிக்கெட் வீர்ர்கள் நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

வங்கதேச கிரிக்கெட் அணி கடந்த ஜனவரி மாதம் முதல் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.