close
Choose your channels

பேனர் விழுந்து இளம்பெண் பலியான சம்பவம்: அச்சகத்திற்கு சீல் வைப்பு

Friday, September 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சாலையில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரின் இல்ல திருமண விழாவின் பேனர் அவர் மீது விழுந்தது. இதனால் நிலைதடுமாறிய சுபஸ்ரீ சாலையில் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேற்படிப்பை முடித்துவிட்ட சுபஸ்ரீ, கனடா செல்வதற்காக தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த துரதிஷ்டமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுபஸ்ரீ தனது பெற்றோருக்கு ஒரே மகள். கனடா செல்ல வேண்டும் என்ற கனவுடன் இருந்த சுபஸ்ரீயின் உயிரை பேனர் வடிவில் காலன் பறித்துவிட்டான்

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை செய்த போலீசார் தண்ணீர் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பேனரை அச்சடித்த அச்சக நிறுவனத்திற்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இருப்பினும் பேனர் வைத்தவர் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது நெட்டிசன்களின் ஆதங்கமாக உள்ளது. தொலைபேசியில் ஒருவர் மிரட்டல் விடுத்தால் தொலைபேசியை கைப்பற்றி, தொலைபேசி நிறுவனத்திர்கு சீல் வைப்பது போல் போலீசார் நடவடிக்கை இந்த விஷயத்தில் இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.