close
Choose your channels

சொந்த நிலத்தை விற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பாஷா சகோதரர்கள்!!!

Monday, May 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொந்த நிலத்தை விற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பாஷா சகோதரர்கள்!!!

 

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் தாஜம்ல் பாஷா மற்றும் முசம்மில் பாஷா என்ற சகோதரர்கள் இருவரும் தங்களது சொந்த நிலத்தை விற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். கர்நாடகாவின் கோலார் தங்கவயல் பகுதியில் சுரங்கம் தோண்டும் பணிகள் முடக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. அன்றிலிருந்தே அந்தப் பகுதி மக்கள் கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வறண்ட பூமியில் பல தொழிலாளர்கள் அன்றாட கூலிக்கு மட்டுமே வேலைப் பார்த்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கு அவர்களது வாழ்வை மேலும் சிக்கலுக்கு ஆளாக்கி இருக்கிறது. கோலார் பகுதியில் இந்த ஊரடங்கால் பல குழந்தைகள் பட்டிணியால் வாடி வருவதைப் பார்த்த பாஷா சகோதரர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை விற்று தற்போது அந்தப்பணத்தை கொண்டு மக்களுக்கு உதவி வருகின்றனர். தற்போது, வீடற்ற தொழிலாளர்களுக்கு உணவு தயாரிக்க தங்களது வீட்டிற்கு அருகில் ஒரு கூடாரத்தை அமைத்துள்ளனர்.

இதுகுறித்து கருத்துக் கூறியுள்ள பாஷா சகோதரர்கள், “சிறு வயதிலேயே எங்களது பெற்றோர்களை இழந்துவிட்டோம். எங்களது தாய்வழி பாட்டியின் ஊரான கோலார் தான் எங்களை காப்பாற்றியது. இங்குள்ள பல்வேறு சமூகங்கள் மத வேறுபாடின்றி எங்களுக்கு உதவி செய்து பல தருணங்களில் காப்பாற்றியுள்ளனர். இப்போது வாழை சாகுபடி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலை செய்துவருகிறோம். இந்நேரத்தில் ஊரடங்கால் தவித்துவரும் ஏழைத் தொழிலாளிகளின் பட்டிணைப் போக்குவது எங்களது கடமை” என்றும் சகோதரர்கள் கூறியுள்ளனர்.

மேலும், கோலார் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு உதவ பாஷா சகோதரர்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுவரை 3 ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு தானியம், எண்ணெய் சர்க்கரை போன்ற அத்யாவசியப் பொருட்களையும் இந்தச் சகோதரர்கள் வழங்கியிருக்கின்றனர். கொரோனா நேரத்தில் இத்தகைய தன்னார்வலர்களின் பெரும்தொண்டு வரவேற்கத் தக்கது எனப் பலரும் பாஷா சகோதரர்களுக்கு வாழ்த்துகளை கூறிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.