இதே தண்டனை மற்ற பாலியல் குற்றவாளிகளுக்கும் கிடைக்குமா? பிரபல வீராங்கனை கேள்வி

  • IndiaGlitz, [Friday,December 06 2019]

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை இன்று அதிகாலை தெலுங்கானா போலீசார் சுட்டு, என்கவுண்டர் செய்த விவகாரம் நாட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்கவுண்டர் செய்த போலீசார்களுக்கு ஒரு பக்கம் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் மனித உரிமை கமிஷனை சேர்ந்தவர்கள் மற்றும் சிலர் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் என்கவுண்டர் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ’ஐதராபாத் போலீசார்களுக்கு தனது சல்யூட்’ என்று பாராட்டு தெரிவித்து இருந்தார்

ஆனால் அதே நேரத்தில் இன்னொரு பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’இந்த என்கவுண்டர் வருங்கால பாலியல் குற்றவாளிகளை தடுத்து நிறுத்துமா? என்பது முக்கிய கேள்வி என்றும் பாலியல் குற்றவாளி எந்தவித சமூக சூழ்நிலையில் இருந்தாலும் இதே தண்டனை வழங்கப்படுமா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். ஜூவாலா கட்டாவின் இந்த ட்விட்டிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்