'பீஸ்ட்' நடிகர் தாக்கியதால் பொதுமக்களில் ஒருவர் படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி

  • IndiaGlitz, [Tuesday,March 08 2022]

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்’ படத்தில் நடித்த நடிகர் ஒருவர் பொது மக்களில் ஒருவரை தாக்கியதை அடுத்து அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல மலையாள நடிகர் ஷான் டாம் சாக்கோ, தளபதி விஜய்யின் 'பீஸ்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகர் ஷான் டாம் சாக்கோ மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது டொவினோ தாமஸ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த பகுதி பொதுமக்கள் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். படப்பிடிப்பு காரணமாக அந்த பகுதியில் டிராபிக் பிரச்சினை ஏற்படுவதாகவும் எனவே படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்த வாக்குவாதங்கள் முற்றிய நிலையில் நடிகர் ஷான் டாம் சாக்கோ திடீரென பொது மக்களில் ஒருவரை அடித்ததாகவும், இதனால் அவருக்கு படு காயம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானம் பேசி வைத்ததாக கூறப்படுகிறது.

More News

முன்னணி நடிகர், நடிகையை இயக்கி வரும் இயக்குனர் பாலியல் வழக்கில் கைது!

முன்னணி நடிகர் நடிகை நடித்து வரும் படத்தை இயக்கி வரும் இயக்குனர் பாலியல் வழக்கில் திடீரென கைது செய்யப்பட்டதால் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்முறையாக விஜய் படத்தில் இந்த இரண்டும் இல்லை: ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

முதல் முறையாக விஜய் படத்தில் நாயகி மற்றும் பாடல்கள் இல்லாமல் உருவாக இருப்பதாக வெளிவந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ரசிகரின் கேள்விக்கு தனது முடியை பதிலாக சொன்ன யாஷிகா!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான யாஷிகா, ரசிகர் ஒருவரின் கேள்விக்கு தனது முடியால் பதில் சொல்லி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

16 நாடுகளை நட்புப் பட்டியலில் இருந்து விலக்கிய ரஷ்யா… இந்தியாவின் நிலைமை என்ன?

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கைக்கு

முடிவுக்கு வருமா உக்ரைன் போர்? பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

11 நாட்களைக் கடந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் கடுமையான போரைத் தொடுத்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டில்