திருமண வாழ்க்கையின் அழகான தருணங்கள் – புகைப்படங்களை டிவிட்டரில் பதிவிட்ட பிரியங்கா காந்தி

  • IndiaGlitz, [Thursday,February 20 2020]

 

காங்கிரஸ் பொதுச் செயலாளரும் சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி தனது 23 ஆவது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.  திருமண நாளை சிறப்பாக கொண்டாடிய பிரியங்கா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக டிவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களையும் பதிவிட்டு இருக்கிறார்.

உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ராபர்ட் வதேராவை 6 ஆண்டுகளாக காதலித்து வந்த பிரியங்கா காந்தி 1997 பிப்ரவரி 18 தேதி மணந்து கொண்டார். இவர்களது திருமணம் டெல்லியில் சோனியா காந்தியின் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்றது. பிரியங்கா மற்றும் ராபர்ட் தம்பதியினருக்கு ரைஹான் என்ற மகனும் மிராயா என்ற மகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

தற்போது, மலரும் நினைவுகள் என்ற தலைப்பில் பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேரா,  தனது மகன் ரைஹான், மகள் மிராயா, நாய்குட்டிகள், தாய் சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்தி ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.  

மேலும், “ஒரு மில்லியன் அழகான தருணங்கள்... காதல், கண்ணீர், சிரிப்பு, செல்ல கோபம், நட்பு, குடும்பம், இறைவனின் 2 அன்பு பரிசுகள்... ஒப்பிட முடியாத நாய் குட்டிகள்... இருவரும் இணைந்த வாழ்நாளில் ஈடுசெய்ய முடியாத உறுதியான ஞானம்... 6+ 23 = 29 ஆண்டுகள் இன்று... என்றென்றும்... ” என நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார்.

ராபர்ட் வதேராவும் திருமண நாளையொட்டி தனது காதல் மனைவிக்கு வாழ்த்துச் செய்திகளைத் தெரிவித்து இருக்கிறார்.  அதில் “இனிய திருமண நாள் பிரியங்கா... பல ஆண்டுகளாக ஒன்றிணைந்து இருப்பது நம்மை ஒன்றாக வளரச் செய்திருக்கிறது. நல்ல தருணங்கள்... கடினமான தருணங்கள்... நம் வாழ்க்கையை சுவாரசியமாக்கி இருக்கின்றன. நீ மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவும், அன்பு நிறைந்த ஆண்டுகள் தொடரவும் வாழ்த்துகள்... உனது பக்கத்தில் இன்னும் பல்லாண்டுகள் இருக்க ஆவலுடன் எதிர் நோக்குகிறேன். என்ன வந்தாலும் பரவாய் இல்லை” எனக் கூறி இருக்கிறார். இருவரின் பதிவுகளும் இத்தம்பதியினரின் அன்பு நிறைந்த காதல் வாழ்க்கையை வெளிப்படுத்து கின்றன. 

More News

சீனக் கப்பலில், சென்னைக்கு வந்த  2 ஊழியர்களுக்கு கொரோனா இல்லை – தீர்ந்தது குழப்பம்

சீனாவில் இருந்து சென்னைக்கு வந்த கப்பல் ஊழியர்கள் இரண்டு பேருக்கு கொரோனா தாக்குதல் இருப்பதாக நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

நூலிழையில் உயிர் தப்பிய கமல்-காஜல் அகர்வால்: அதிர்ச்சி தகவல்

கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பின்போது நேற்று நடந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இந்த விபத்தில் கமல் மற்றும் காஜல் அகர்வால் நூலிழையில்

உருத்தெரியாமல் மாறிய பேருந்து: அவிநாசி அருகே நடந்த விபத்தில் 20 பேர் பலி

திருப்பூர்  மாவட்டம் அவிநாசி அருகே கேரள அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

'இந்தியன் 2' விபத்து: கிரேன் ஆபரேட்டர் தலைமறைவால் பரபரப்பு

உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு நேற்று இரவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ராட்சத கிரேன் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தினால்

'இந்தியன் 2' விபத்தில் கார்ட்டூனிஸ்ட் மதன் மருமகன் பலி: அதிர்ச்சி தகவல்

கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக