close
Choose your channels

திருமண வாழ்க்கையின் அழகான தருணங்கள் – புகைப்படங்களை டிவிட்டரில் பதிவிட்ட பிரியங்கா காந்தி

Thursday, February 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமண வாழ்க்கையின் அழகான தருணங்கள் – புகைப்படங்களை டிவிட்டரில் பதிவிட்ட பிரியங்கா காந்தி

 

காங்கிரஸ் பொதுச் செயலாளரும் சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி தனது 23 ஆவது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.  திருமண நாளை சிறப்பாக கொண்டாடிய பிரியங்கா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக டிவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களையும் பதிவிட்டு இருக்கிறார்.

உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ராபர்ட் வதேராவை 6 ஆண்டுகளாக காதலித்து வந்த பிரியங்கா காந்தி 1997 பிப்ரவரி 18 தேதி மணந்து கொண்டார். இவர்களது திருமணம் டெல்லியில் சோனியா காந்தியின் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்றது. பிரியங்கா மற்றும் ராபர்ட் தம்பதியினருக்கு ரைஹான் என்ற மகனும் மிராயா என்ற மகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

தற்போது, மலரும் நினைவுகள் என்ற தலைப்பில் பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேரா,  தனது மகன் ரைஹான், மகள் மிராயா, நாய்குட்டிகள், தாய் சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்தி ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.  

மேலும், “ஒரு மில்லியன் அழகான தருணங்கள்... காதல், கண்ணீர், சிரிப்பு, செல்ல கோபம், நட்பு, குடும்பம், இறைவனின் 2 அன்பு பரிசுகள்... ஒப்பிட முடியாத நாய் குட்டிகள்... இருவரும் இணைந்த வாழ்நாளில் ஈடுசெய்ய முடியாத உறுதியான ஞானம்... 6+ 23 = 29 ஆண்டுகள் இன்று... என்றென்றும்... ” என நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார்.

ராபர்ட் வதேராவும் திருமண நாளையொட்டி தனது காதல் மனைவிக்கு வாழ்த்துச் செய்திகளைத் தெரிவித்து இருக்கிறார்.  அதில் “இனிய திருமண நாள் பிரியங்கா... பல ஆண்டுகளாக ஒன்றிணைந்து இருப்பது நம்மை ஒன்றாக வளரச் செய்திருக்கிறது. நல்ல தருணங்கள்... கடினமான தருணங்கள்... நம் வாழ்க்கையை சுவாரசியமாக்கி இருக்கின்றன. நீ மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவும், அன்பு நிறைந்த ஆண்டுகள் தொடரவும் வாழ்த்துகள்... உனது பக்கத்தில் இன்னும் பல்லாண்டுகள் இருக்க ஆவலுடன் எதிர் நோக்குகிறேன். என்ன வந்தாலும் பரவாய் இல்லை” எனக் கூறி இருக்கிறார். இருவரின் பதிவுகளும் இத்தம்பதியினரின் அன்பு நிறைந்த காதல் வாழ்க்கையை வெளிப்படுத்து கின்றன. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.