close
Choose your channels

பெங்களூர் வரை பரவியது ஸ்டெர்லைட் போராட்டம்

Thursday, May 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் கடந்த பல ஆண்டுகளாக காவிரி பிரச்சனை இருந்தாலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு பெங்களூர் மக்கள் ஆதரவு கொடுத்துள்ளது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தூத்துகுடியில் இருந்து ஸ்டெர்லைட் ஆலையை வெளியேற்ற அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நேற்றும் நேற்று முன் தினமும் காவல்துறையினர்களின் துப்பாக்கி சூடு சம்பவத்தால் 13 பேர் பலியான விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தூத்துகுடி சம்பவத்திற்கு கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதிலும் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பெங்களூரில் உள்ள பொதுமக்களும் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்ததோடு தமிழக அரசுக்கு தங்கள் எதிர்ப்பை உருவப்பொம்மையை எரித்து தெரிவித்தனர். மேலும் தமிழக அரசையும், ஸ்டெர்லைட் நிர்வாகத்தையும் எதிர்த்து கோஷமிட்டனர். ஸ்டெர்லைட் போராட்டத்தீ மெல்ல மெல்ல நாடு முழுவதும் பரவி வருவதால் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.