close
Choose your channels

திருமணத்திற்கு முந்தைய நாள் எய்ட்ஸ் இருப்பதாக கூறிய மணமகன்: அதிர்ச்சி தகவல்

Friday, December 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெங்களூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பெண் பார்த்து திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென பெண் வீட்டாரிடம் திருமணத்துக்கு முந்திய நாள் தனக்கு எயிட்ஸ் இருப்பதாக மாப்பிள்ளை கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த கிரண்குமார் என்ற வாலிபருக்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். கிரண்குமார் திருமணத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்த நிலையில் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி ஒரு பெண்ணை பார்த்து அந்தப் பெண்ணை அவருக்கு மணம் முடிக்க திட்டமிட்டனர். பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்யப்படும் வரை கிரண்குமார் அமைதியாக இருந்ததால் அந்த அமைதியை சம்மதமாக பெற்றோர்கள் எடுத்துக்கொண்டனர்.

இந்த நிலையில் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மறுநாள் திருமணம் என்ற நிலையில் இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த முடிவு செய்த கிரண்குமார், பெண் வீட்டாரை தொடர்பு கொண்டு தனக்கு எய்ட்ஸ் இருப்பதாகவும் இந்த திருமணம் நடந்தால் உங்கள் பெண்ணிற்கும் எய்ட்ஸ் பரவும் என்றும் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தினார்கள்.

அதன் பின்னர் கிரண்குமார் பேச்சில் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது அவருக்கு எயிட்ஸ் இல்லை என்பது தெரியவந்தது. இதன் பின்னர் அவரிடம் துருவித் துருவி விசாரித்த போது திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லாததால் எய்ட்ஸ் நாடகத்தை நடத்தியதாக கூறினார். இதனால் பெண் வீட்டார் கோபமடைந்தனர். திருமணத்துக்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளும் செய்து பொருள் செலவு மற்றும் மன உளைச்சல் அடைந்து இருப்பதாக போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கிரண்குமார் கைது செய்யப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.