தம்பியை தூக்கில் தொங்கவிட்ட தந்தை, மொபைல் போனில் படம்பிடித்த மகள்!

  • IndiaGlitz, [Monday,June 03 2019]

தன் உடம்பிறந்த தம்பியை தனது தந்தையே தூக்கில் தொங்கவிட்ட கொடூர காட்சியை அவரது மகள் மொபைல் போனில் வீடியோ எடுத்த சம்பவம் ஒன்று பெங்களூர் அருகே நடந்துள்ளது.

பெங்களூரை சேர்ந்த 43வயது சுரேஷ் பாபு என்பவர் சேல்ஸ் ரெப் பணியில் உள்ளார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சேல்ஸ் ரெப் பணியில் இருந்து கொண்டே சுரேஷ் ஏலச்சீட்டும் நடத்தியுள்ளார். ஆனால் ஏலச்சீட்டில் நஷ்டம் அடைய அதனை சரிக்கட்ட அதிகளவில் கடன் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் திருப்பி தரும்படி நெருக்குதல் கொடுத்ததால் வேறு வழியின்றி குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். முதல்கட்டமாக தனது மகனை மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டார். மகன் கதறியபடியே உயிரை விட்டதை பார்த்து சுரேஷும் அவரது மனைவியும் கதறி அழுதனர். இந்த காட்சியை சுரேஷின் மகள் தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார்.

இதனையடுத்து சுரேஷின் மனைவி தூக்கில் தொங்கி உயிரை விட்டார். இதற்குள் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளிக்க, போலீசார் விரைந்து வந்து சுரேஷையும் அவரது மகளையும் தற்கொலை செய்வதில் இருந்து காப்பாற்றினர். இருப்பினும் மகனின் மரணத்திற்கு காரணமாக சுரேஷை போலீசார் கைது செய்தனர்

தாயும் தம்பியும் மரணம் அடைய, தந்தையும் சிறையில் இருக்க, 17 வயது மகள் மட்டும் யாருமின்றி நிர்க்கதியாக உள்ளது அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
 

More News

'தனுஷ் 35' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தற்போது இரண்டு படங்களை தயாரித்து வருகிறது என்பதும்

விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனி, அர்ஜூன் இணைந்து நடித்த 'கொலைகாரன்' திரைப்படம் கடந்த மாதமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

பேட்மிண்டன் வீராங்கனையுடன் நெருக்கமாக உள்ள விஷ்ணுவிஷால்!

நடிகர் விஷ்ணுவிஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ராட்சசன்' மற்றும் 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசம்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

மெட்ரோ ரயில், அரசு போக்குவரத்து பேருந்து ஆகியவற்றில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

சூர்யாவுக்கும் ரகுலுக்கும் சம்பவம் நடந்ததா? ரசிகரின் கேள்விக்கு செல்வராகவன் பதில்!

சமீபத்தில் வெளியான சூர்யாவின் 'என்.ஜி.கே.' திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் திருப்திகரமாக இருந்ததாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.