close
Choose your channels

நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாக்யராஜ்

Wednesday, June 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி ஞாயிறு அன்று நடைபெறவிருந்த நிலையில் சற்றுமுன் மாவட்ட பதிவாளர் இந்த தேர்தலை நிறுத்த அதிரடியாக உத்தரவிட்டார்.

வாக்காளர் பட்டியலில் குளறுபடி, தேர்தல் நடத்தும் இடத்தில் பாதுகாப்பு, தேர்தல் நடத்தும் அதிகாரி மீது குற்றச்சாட்டு போன்ற பல காரணங்களால் இந்த தேர்தல் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையாக இருந்த பாண்டவர் அணியினர்களுக்கு இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் நிறுத்தம் குறித்த உத்தரவு குறித்து சுவாமி சங்கரதாஸ் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.பாக்யராஜ் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாகவும், சுவாமி சங்கரதாஸ் அணி நிர்வாகிகளுடன் கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே இந்த தேர்தலை நடத்த விடமாட்டேன், சட்டப்படி தேர்தலை நிறுத்துவேன் என்று கூறிய நடிகர் ராதாரவி, சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.