close
Choose your channels

பாண்டவர் அணியை அடுத்து ஆளுனரை சந்தித்த பாக்யராஜ் அணி

Thursday, June 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நேற்று பாண்டவர் அணியின் சார்பில் நடிகர்கள் விஷால், கருணாஸ் மற்றும் பூச்சிமுருகன் ஆகியோர் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தனர். அவர்கள் ஆலோசனை செய்த சில நிமிடங்களில் நடிகர் சங்க தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு வெளியானது

இந்த நிலையில் பாண்டவர் அணியை அடுத்து பாக்யராஜ் அணியினர்களும் இன்று காலை 11 மணிக்கு தமிழக ஆளுனரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பாக்யராஜ், ஐசரி கணேஷ், குட்டி பத்மினி, பிரசாந்த், சங்கீதா ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் சங்க தேர்தல் நடத்தும் இடம், யாருடைய மேற்பார்வையில் தேர்தலை நடத்துவது என்பது குறித்து பாக்யராஜ் அணியினர் கவர்னரிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது

பாண்டவர் அணி, பாக்யராஜ் அணி ஆகிய இரு அணியினர்களும் முதல்வர், துணை முதல்வர் மற்றும் செய்தி-விளம்பரத்துறை அமைச்சர் ஆகியோர்களை சந்திக்காமல் ஆளுனரை சந்தித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.