close
Choose your channels

தொடங்கியது எஸ்பிபி இறுதிச்சடங்கு: பாரதிராஜா, அமீர் இறுதியஞ்சலி!

Saturday, September 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு புரோகிதர்கள் இறுதிச்சடங்குகளை சற்றுமுன் தொடங்கியதாக தகவல் வெளிவந்துள்ளது.

மறைந்த எஸ்பிபியின் உடல் அவரது பண்ணை வீட்டில் தற்போது வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஒருசிலருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் இயக்குநர் அமீர், பாடகர் மனோ உள்ளிடோரும் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் மறைந்த பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பாடகர் எஸ்.பி.பி. உடல் இன்று பிற்பகல் 12 மணிக்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.