பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை: பாரதிராஜா பெருமிதம்

  • IndiaGlitz, [Thursday,August 13 2020]

நடிகை ராதிகா திரையுலகில் அறிமுகமாகி 42 வருடங்கள் ஆனதை அடுத்து அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே

கடந்த 1978ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய ’கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தில் பாஞ்சாலி என்ற கேரக்டரில் ராதிகா அறிமுகமானார். அதன் பின்னர் ரஜினி, கமல் உள்பட பல பிரபலங்களுடன் ஜோடியாக நடித்து கடந்த 42 ஆண்டுகளாக ஹீரோயின் மற்றும் குணசித்திர வேடங்களில் கலக்கி வருகிறார். மேலும் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ராதிகாவின் 42 வருட திரையுலக பயணத்தை பாராட்டி அவரை அறிமுகம் செய்த இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

என் இனிய தமிழ் மகளே,
கிழக்கே போகும் ரயிலில் பாஞ்சாலி என்கின்ற 16 வயது ஒரு மழலையை ஏற்றி
கொடி அசைத்து பயணிக்க வைத்தேன்..
42 வருடமாகிறது
என் பாஞ்சாலியின்
பயணம் இன்னும்
நிற்கவில்லை..
பால்வெளித் திரளுக்கு எல்லை இல்லை..

பாரதிராஜாவின் இந்த பாராட்டு குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த நடிகை ராதிகா ’இதைவிட ஒரு சிறப்பான நாள் இருக்க முடியுமா? என்று தெரியவில்லை. நான் உங்களால் மட்டுமே நான் இருக்கிறேன்.உங்கள் ஆசீர்வாதங்கள் என்னை பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆணாதிக்கம் நிறைந்த இந்த திரையுலக கோட்டையில் ஒரு பெண்ணின் சாதனைகளை கொண்டாடாத சமகாலத்தவர் மத்தியில் உங்களுடைய வார்த்தைகள் எனக்கு மிகப்பெரியதாக உள்ளது, எப்போதும் போல’ என்று ராதிகா தெரிவித்துள்ளார்

More News

கொரோனாவை சிறப்பாகக் கையாண்டு இந்திய அளவில் முன்மாதிரியாகத் திகழும் தமிழகம்!!! அதிரடி நடவடிக்கைகள்!!!

இந்திய அளவில் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.

தல தோனிக்கு கொரோனா பரிசோதனை: ரிசல்ட் என்ன?

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு: கைது செய்யப்படுவாரா?

நடிகரு பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி!!! திடுக்கிட வைக்கும் பின்னணி!!!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு உலகத்திலேயே முதல்முறையாக ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 12 இல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்

167 வருட வரலாற்றில் இதுதான் முதல்முறை- திடுக்கிட வைக்கும் இந்திய ரயில்வே துறையின் அறிவிப்பு!!!

கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச் 23 இரவு முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.