பாரதிராஜா குடும்பத்தின் 3ஆம் தலைமுறை இயக்குனர்.. பள்ளியில் படிக்கும்போதே இயக்கிய படம்.!

  • IndiaGlitz, [Tuesday,February 27 2024]

இயக்குனர் சிகரம் பாரதிராஜா மற்றும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜா ஆகிய இருவரும் இயக்குனர்கள் என்ற நிலையில் தற்போது பாரதிராஜாவின் பேத்தி மதிவதனி என்பவர் தான் படிக்கும் பள்ளிக்காக ஒரு குறும்படம் இயக்கிய நிலையில் பாரதிராஜா அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா என்பதும் கிராமத்து மண்வாசனை மிக்க படங்களை இயக்கியுள்ள அவர் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளார் என்பதும் தெரிந்தது.

அதேபோல் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா ஒரு சில படங்களில் நடித்த நிலையில் சமீபத்தில் வெளியான ’மார்கழி திங்கள்’ என்ற படத்தை இயக்கினார் என்பதும் இந்த படத்தில் பாரதிராஜா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் மனோஜ் பாரதிராஜாவின் மகளான மதிவதனி என்பவரும் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். பாரதிராஜா குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை இயக்குனரான மதிவதனி தான் படிக்கும் பள்ளிக்காக ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும்படத்தில் பாரதிராஜா நடித்துள்ள நிலையில் சிறுவயதிலேயே அவரது அசாத்திய திறமையை பார்த்து அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பாரதிராஜா தன்னுடைய இயக்கத்திலேயே சில படங்கள் நடித்துள்ள நிலையில், தனது மகன் இயக்கிய ’மார்கழி திங்கள்’ படத்திலும், தனது பேத்தி இயக்கிய குறும்படத்திலும் நடித்துள்ளதால் 3 தலைமுறை குடும்பத்தினர் படத்தில் நடித்தவர் என்ற பெருமையையும் பாரதிராஜா பெற்றுள்ளார்.

More News

'தலைவர் 172' படத்தை தயாரிப்பது இவரா? இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 172வது படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்த நிலையில் இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே

நேற்று வெளியான வீடியோ குறித்த லேட்டஸ்ட் செய்தி.. ஏமாற்றத்தில் சிம்பு ரசிகர்கள்..!

நேற்று சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் இந்த வீடியோ அவர் நடிக்க இருக்கும் 'எஸ்டிஆர் 48' 'படத்தின் வீடியோ என்று அனைவராலும்

ஆடி காரில் வந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஏஆர் ரஹ்மான்: காரணம் இதுதான்..!

சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்ய  ஆடி காரில் வந்த  ஏஆர் ரஹ்மான் வீட்டிற்கு திரும்பும் போது ஆட்டோவில் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தில் இணையும் 'ஜெய ஜெய ஜெய ஜெயஹே' நாயகி..!

பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

வெறும் 50 ஆயிரம் ரூபாயில் சின்மயி பிரச்சனையை முடித்த லோகேஷ் கனகராஜ்.. எப்படி தெரியுமா?

வெறும்  50 ஆயிரம் ரூபாயில் சின்மயி குறித்த பிரச்சனையை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.