சூர்யாவின் நீட் அறிக்கை குறித்து பாரதிராஜா!

பிரபல நடிகர் சூர்யா நேற்று நீட் குறித்து வெளியிட்ட காரசாரமான அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்பொழுது கூட சமூக வலைதளங்களில் சூர்யாவின் அறிக்கை குறித்த ஹேஷ்டேக் டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யாவின் அறிக்கை குறித்து பல திரையுலக பிரமுகர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் சூர்யாவின் அறிக்கையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

இந்த நிலையில் இன்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய பாரதிராஜா, சூர்யாவின் அறிக்கை குறித்து கூறிய போது ’நடிகர் சூர்யா தவறாக நடக்க மாட்டார், தவறாக பேசவும் மாட்டார்’ என்று கூறினார்

மேலும் படமெடுக்கும் தயாரிப்பாளர்களின் பிரச்சனையை தீர்க்கும் வகையில் புதிய சங்கம் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் திரைப்படம் திரைக்கு போகவேண்டும் என்றுதான் நாங்கள் முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளார்