சென்று வா.. செந்நிறத் தோழனே: எஸ்பி ஜனநாதன் மறைவுக்கு பாரதிராஜா இரங்கல்!

பிரபல இயக்குனர் எஸ்பி ஜனநாதன் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் அவர் கவலைகிடமாக இருப்பதாக வெளிவந்த செய்தியால் திரையுலகம் அதிர்ச்சியில் மூழ்கியது. இந்த நிலையில் சற்றுமுன் இயக்குனர் எஸ்பி ஜனநாதன் காலமானார் என்று வெளியான செய்தியை பார்த்தோம்.

இதனை அடுத்து தமிழ் திரையுலகினர் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். எஸ்பி ஜனநாதன் அவர்களின் மறைவு திரையுலகின் மிகப் பெரிய இழப்பு என்று பெரும்பாலான திரையுலகினர் கருத்து கூறி வரும் நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது டுவிட்டரில் சென்று வா செந்நிறத் தோழனே என்று கவிதை வடிவில் ஒரு இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நம்பிக்கையும்..
பிரார்த்தனைகளும்..
கை நழுவிச் சென்றாலும்
இயற்கை அன்னை 
ஒரு போதும் கைவிடாது
உன்னைத் தழுவிக்
கொள்ளும்..
சென்று வா..
செந்நிறத் தோழனே.

பாரதிராஜா.

More News

குக் வித் கோமாளி: எலிமினேட் ஆன பவித்ராவின் உருக்கமான டுவீட்!

இன்றைய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பவித்ரா எலிமினேட் செய்யப்பட்டார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் அவர் தனது டுவிட்டரில் உருக்கமான டுவிட்

பிரசாந்தின் 'அந்தகன்' படத்தில் இணைந்த பிக்பாஸ் நடிகை!

பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'அந்தாதூன்' திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமான 'அந்தகன்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே

திமுகவுக்கு கதை தேவையென்றால் நான் தருகிறேன்: கமல்ஹாசன்

இந்தியா டுடே என்ற ஊடகம் நடத்தும் கான்க்ளேவ் என்ற நிகழ்ச்சியில் பல அரசியல்வாதிகள் கடந்த இரண்டு நாட்களாக கலந்து கொண்டு கேள்விகளுக்கு சுவராசியமான பதில்களை தந்து கொண்டிருக்கிறார்கள்

பிரபல இயக்குனர் ஜனநாதன் காலமானார்!

பிரபல இயக்குநர் எஸ்பி ஜனநாதன் சற்றுமுன் காலமானார். அவரது மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

சூரிய உதயத்தின்போது 'பிகில்' நடிகையின் சூப்பர் போட்டோஷூட்!

தளபதி விஜய் நடித்த 'பிகில்' படத்தில் நடித்த நடிகை ஒருவரின் சமீபத்திய போட்டோஷூட் இணையதளங்களில் வைரலாகி வருகிறது