உண்மை வென்றது! பாவனா சகோதரரின் நெகிழ்ச்சியான அறிக்கை

  • IndiaGlitz, [Tuesday,July 11 2017]

பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் பிரபல நடிகர் திலீப் இருப்பதாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். மேலும் திலீப் மனைவியும் பிரபல நடிகையுமான காவ்யா மாதவனும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாவனாவின் சகோதரரும் 'பட்டினப்பாக்கம்' படத்தின் இயக்குனருமான ஜெயதேவ், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடவுளுக்கு நன்றி

இந்தப் பிரச்சினையில் இறுதியில் உண்மை வென்றுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகின்றேன். ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கின் விசாரணைக்கு ஏற்பட்ட பல்வேறு குறுக்கீடுகளுக்கு மத்தியில் உண்மை வெற்றி பெற கடவுள் எங்களுக்கு துணை நின்றிருந்தார்.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நாங்கள் மேல்முறையீடு செய்யாததற்கு முக்கிய காரணம் நாங்கள் கேரள காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கை. அதுமட்டுமின்றி நீதி வெல்லும் என்ற நம்பிக்கையும் ஒரு காரணம்.

எங்களுடன் துணை நின்ற அனைவருக்கு எங்களது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்காக குரல் கொடுத்த ஊடக நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக எந்தவித அழுத்தத்துக்கும் அடிபணியாமல் நடவடிக்கை எடுத்த கேரள போலீஸாருக்கும் எங்களுடைய நன்றி.

உலகம் முழுவதும் பல்வேறு திசைகளில் இருந்தும் எங்கள் மீது நிபந்தனையற்ற அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. குற்றவாளிகள் அனைவருமே சிறைக்கு அனுப்பப்படும்வரை அனைவரது ஆதரவையும் இதேபோன்று எதிர்பார்க்கிறோம்.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கஞ்சாகருப்பு ரீ-எண்ட்ரியா?

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி பலவிதமான சர்ச்சைகளுக்கு ஆளானாலும் கோடிக்கணக்கானோர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக பிரபலம் அடைந்துவருகிறது...

நான் அப்பாவி, அதனால் எனக்கு பயமில்லை: கைதான திலீப் பேட்டி

பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்குள்ளான வழக்கில் நேற்று அதிரடியாக பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்

திருமணத்திற்கு முன் கேட்ட 2 கேள்விகள்: ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியின் முதல் பேட்டி

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முதன்முதலில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி, தனது கணவரிடம் முதன்முதலில் கேட்ட இரண்டு கேள்விகள் மற்றும் அவரது குணங்கள் குறித்து மனம் திறந்து கூறினார்...

இயக்குனர் பாலாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்தால்தான் ஒரு நடிகர் முழுமையான நடிகராவார் என்ற நிலை கடந்த சில வருடங்களுக்கு முன் இருந்தது...

ஹாலிவுட் படத்தில் விஜய் வில்லன்

கன்னடத்தில் மிகப்பெரிய ஸ்டாராக விளங்கி வரும் கிச்சா சுதீப், விஜய் நடித்த 'புலி' படத்தில் வில்லனாக நடித்தார்...