இயல்பு நிலைக்கு விரைவில் திரும்புகிறார் பாவனா.

  • IndiaGlitz, [Tuesday,February 21 2017]

கடந்த வாரம் பாலியல் தொல்லைக்கு ஆளாகிய நடிகை பாவனா, அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீண்டிருக்க மாட்டார் என்றே பலரும் நினைத்த நிலையில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் தயாராகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜினு ஆபிரஹாம் இயக்கவுள்ள 'ஆதம்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த பாவனா, விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளாராம். பிரித்விராஜ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் நரேன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
பாலியல் தொல்லையால் அதிர்ச்சி அடைந்து இருந்தபோதிலும் தமிழ், மற்றும் மலையாளத்தில் உள்ள சக நடிகைகள் அவருக்கு உறுதுணையாக குரல் கொடுத்ததால் தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சக நடிகைகள் மற்றும் நண்பர்கள் கூறிய ஆறுதலால் கிட்டத்தட்ட நார்மல் நிலைக்கு பாவனா வந்துவிட்டதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது
இதுபோன்ற ஒரு அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர நிச்சயம் மன உறுதியும் தைரியமும் வேண்டும். அந்த மன உறுதியுடன் பாவனா தனக்கு நேர்ந்த துன்பத்தில் இருந்து மீண்டு வந்ததற்கு அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

More News

103 வயது பழம்பெரும் இயக்குனர் மித்ரதாஸ் காலமானார்

பி.யூ.சின்னப்பா நடித்த 'தயாளன்', எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த 'சிவகாமி' உள்பட பல படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் மித்ரதாஸ் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 103

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகையா?

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ஹாகர சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என சிறை அதிகாரிகளிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

நம்பிக்கை வாகெடுப்பு குறித்த ஸ்டாலின் வழக்கு. நாளை விசாரணை

கடந்த சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியது. இந்த வாக்கெடுப்பில் அமளி ஏற்பட்டதால் திமுக உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பின்னர் வாக்கெடுப்பு நடந்தது....

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தென்னிந்திய திரையுலகையே சமீபத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் என்றால் அது பிரபல நடிகை பாவனாவை மர்ம நபர்கள் கடத்தி அத்துமீறிய சம்பவம்தான். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குற்றவாளிகளை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்க கோரியும் மலையாள திரையுலகம் மட்டுமின்றி தமிழ் திரையுலகமும் கேரள அரசுக்கு கோரிக்கை விட

பாவனா கடத்தலுக்கு பிரபல நடிகர் காரணமா?

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தின் விசாரணை தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஏற்கனவே இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் என்று கூறப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது...