பிரபல நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை: கடிதத்தில் கூறப்பட்ட அதிர்ச்சி காரணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
மனச்சோர்வு உள்பட பல்வேறு காரணங்களால் நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சுஷாந்த்சிங் உள்பட ஒரு சில நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது போஜ்புரி நடிகை அனுபமா என்பவரும் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
40 வயதான நடிகை அனுபமா பதக் தனது வீட்டில் ஆகஸ்ட் 2ம் தேதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு நாள் முன்பு நடிகை அனுபமா தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் சில முக்கியமான தகவல்களை தெரிவித்துள்ளார் என்றும் யாரையும் யாரும் நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிகிறது மேலும் அனுபமா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதில் தனது நண்பரின் வேண்டுகோளை அடுத்து ஒரு நிறுவனத்தில் 10ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ததாகவும், அந்த முதலீடு 2019ஆம் ஆண்டே முதிர்வுக்கு வந்த பின்னரும் இன்னும் பணம் திரும்ப கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் லாக்டவுன் நேரத்தில் தனது நண்பர் ஒருவர் சொந்த ஊர் செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றதாகவும் ஆனால் அவர் திரும்பி தர மறுப்பதாகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட் நட்சத்திரம் சமீரா சர்மா தற்கொலை செய்துகொண்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது போஜ்புரி நடிகை அனுபமா தற்கொலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.