13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போஜ்பூரி பாடகர்… போக்சோவில் கைது!

  • IndiaGlitz, [Friday,June 09 2023]

பீகார் மாநிலத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் போஜ்பூரி இளம் பாடகர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதாகக் கூறப்படும் நிலையில் நாடு முழுவதும் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

போஜ்பூரி சினிமா துறையில் பணியாற்றி வருபவர் இளம் பாடகர் பபுல் பீகாரி அபிஷேக். 21 வயதான இவர் சினிமாவை தவிர தனியாக யூடியூப் சேனலையும் நடத்தி வந்துள்ளார். 27 ஆயிரம் ஃபாலோயர்களை கொண்டுள்ள நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ் நகர் பகுதியில் வசித்துவந்த 13 வயது சிறுமியுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

இதையடுத்து சிறுமியை தனியாக ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்ற அவர் அங்குவைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் சிறுமியை தகாத முறையில் புகைப்படங்களை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான அந்த சிறுமி பாடகரை விட்டு விலகி இருக்கிறார். மேலும் தனக்கு நடந்த கோர சம்பவம் குறித்து பெற்றோரிடமும் தெரிவிக்காமல் மறைத்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடகர் அபிஷேக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுமியின் சில அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்ட நிலையில், இதனால் பயந்துபோன அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் உடனடியாக காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டம் மற்றும் சிறுமியின் அந்தரங்கப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட குற்றத்திற்காக தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 14 இன் கீழ் தற்போது பாடகர் அபிஷேக்கை கைது செய்துள்ளனர்.

பிரபல பாடகர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது மற்றும் அவரது அந்தரங்க புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்ட இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் சினிமா வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
 

More News

அம்மா அப்பாவுக்கு திருமண வாழ்த்து கூறிய நயன் - விக்கி குழந்தைகள்: செம்ம புகைப்படம்..!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் முதலாவது திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தின் ரிலீஸ் உரிமை: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகும் என செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ்

யாஷிகா அம்மாவை அடுத்து ரிச்சர்ட் ரிஷியும் விளக்கம்.. அந்த போட்டோ இதற்காகத்தான்..!

சமீபத்தில் அஜித் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் ஆகிய இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வந்த நிலையில் இருவரும் காதலிக்கின்றார்களா?

சிலைகளோடு சிலையாக உட்கார்ந்திருக்கும் ரம்யா பாண்டியன்..! வைரல் புகைப்படம்..!

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலைகளோடு சிலையாக உட்கார்ந்திருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

இயக்குனர் 'மர்மதேசம்' நாகாவுக்கு என்ன ஆச்சு? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த உறவினர்கள்..!

பிரபல இயக்குனர் 'மர்மதேசம்' நாகா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வரும் நிலையில் அவர் நலமுடன்