close
Choose your channels

வெளியே வந்த கவின் தாயாருக்காக செய்த முதல் வேலை!

Saturday, September 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வாரங்களுக்கு முன் சிட்பண்ட் மோசடி ஒன்றில் சிக்கிய பிக்பாஸ் கவின் தாயார் ராஜலட்சுமி மற்றும் பாட்டி தமயந்தி நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கவின் பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் அவருக்கு அவருடைய தாயார் மற்றும் பாட்டி கைது செய்யப்பட்ட விபரம் தெரிவிக்கப்படவில்லை

இந்த நிலையில் ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கவின் தன்னுடைய தாயார் ராஜலட்சுமி மற்றும் பாட்டி தமயந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் முதல் வேலையாக இருவரையும் ஜாமீனில் எடுத்தார். மேலும் தாயாரிடம் சீட்டுப்பணம் கட்டி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பணத்தை திருப்பி தருவதாக கவின் வாக்கு கொடுத்துள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது

தாயார் மற்றும் பாட்டி சிறையில் அடைக்கப்பட்டது கவினுக்கு தெரியாது என்றாலும் தனது குடும்பம் பொருளாதார பிரச்சனையில் இருப்பது கவினுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் லாஸ்லியா மற்றும் சாண்டி உள்பட பிக்பாஸ் போட்டியாளர்கள் வற்புறுத்தியும் கவின் ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.