ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்: லீக் ஆன புகைப்படங்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் கடந்த ஒரு மாதமாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் குறித்த தகவல்களை பார்த்தோம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், வேல்முருகன், ஆஜித், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ், அனுமோகன், ரியோ ராஜ், சனம் ஷெட்டி, ஷாலு ஷம்மு உள்ளிட்ட சிலர் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது

 

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பின்னர் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த செய்தி தற்போது உறுதியாகியுள்ளது

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போஸ்களுடன் புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஷிவானி நாராயணன் தற்போது நான்கு சுவர்களுக்குள் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து வருகிறார். அதே பேக்ரவுடில் ரியோராஜ் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். எனவே பிக்பாஸ் போட்டியாளர்கள் இருவரும் ஒரே ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 4ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்றும் முதல் நாளில் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் வழக்கமான நிகழ்ச்சியும் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

More News

விஜிபி சிலை மனிதன் குறித்த வதந்தி: அவரே அளித்த விளக்கம்

சென்னை விஜிபி கடற்கரையான கோல்டன் கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் முதன் முதலில் பார்ப்பது வாயில் அருகே உள்ள அசையாமல் நிற்கும் நபரைத்தான் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தியக் காலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழகத்திற்குச் சிறப்பிடம் வேண்டும்… கோரிக்கை வைத்த தமிழக முதல்வர்!!!

சமீபத்தில் இந்திய கலாச்சாரத்தை ஆராய்வதற்காக 14 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்தது.

ஊரேகூடி நிச்சயித்த திருமணத்தை தைரியமாகத் தடுத்து நிறுத்திய 13 வயது சிறுமி… பரபரப்பு சம்பவம்!!!

கொரோனா ஊரடங்கால் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.

கொரோனாவால் வேலை இழந்து வாடிய இளைஞருக்கு அடித்தது லாட்டரி… சுவாரசியத் தகவல்!!!

கேரளாவில் கொரோனாவால் வேலையிழந்த ஒரு இளைஞருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பரிசுத்தொகை கிடைத்து இருக்கிறது

திருமணமான 13 நாட்களில் பாலியல் புகார் கொடுத்த பிரபல நடிகை! கணவர் கைது!

பிரபல நடிகை பூனம் பாண்டே தனது நீண்டநாள் காதலர் சாம் பாம்பே என்பவரை செப்டம்பர் 10ஆம்  திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி வெளியானது என்பது தெரிந்ததே.