close
Choose your channels

போதை பொருள் விவகாரம்: பிக்பாஸ் போட்டியாளர் உள்பட 2 நடிகைகள் கைது!

Wednesday, October 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்கனவே ஒரு சில நடிகைகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சின்னத்திரை நடிகை ஒருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. மேலும் இந்த விவகாரத்தில் ஒரு சில நடிகைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்து வந்தனர்

இந்த நிலையில் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் நடிகையுமான ஆதம் பாஷா என்பவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் இவர் பிரபல தொலைக்காட்சி நடிகை அனிகா என்பவரிடம் போதைப்பொருள் பெற்றதாகவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல்கள் வெளிவந்தது

இதனை அடுத்து டிவி சீரியல் நடிகை அனிகா மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ஆதம் பாஷா ஆகிய இருவரையும் கைது செய்த போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் இருவரிடமும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.