பிக்பாஸ் குறித்து கணவரின் பதிவு.. நெகிழ்ச்சி அடைந்த ரக்சிதாவின் பதில்..!

  • IndiaGlitz, [Sunday,January 29 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கணவரின் பதிவுகளால் நெகிழ்ச்சி அடைந்த ரக்சிதா பதில் பதிவு செய்துள்ளதை அடுத்து தற்போது பிரிந்து இருக்கும் இருவரும் விரைவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் ஆறாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீசனில் அசீம் டைட்டில் வின்னர் பட்டம் பெற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ஒருவரான ரக்சிதா கிட்டத்தட்ட கடைசி நேரம் வரை தாக்குப்பிடித்து இருந்தார் என்பதும் அவருக்கு பொதுமக்களின் மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரக்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது அவருக்கு எதிராக பரப்பப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு அவரது கணவர் பதிலடி கொடுத்திருந்தார் என்பதும் ரக்சிதாவுக்கு ஆதரவாக அவ்வப்போது பதிவு செய்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் ரக்சிதா கணவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ’பிக்பாஸ் நிகழ்ச்சியால் தான் ரக்சிதாவை 24 மணி நேரமும் என்னால் பார்க்க முடிந்தது. இந்த நிகழ்ச்சியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், நீங்கள் உண்மையில் பல கோடி இதயங்களை வென்று உள்ளீர்கள்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த பதிவுக்கு பதில் அளித்த ரக்சிதா எனக்கு ஆதரவாளித்த அனைவருக்கும் மிக்க நன்றி, நீங்கள் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் மறைமுகமாக சமூக வலைதளங்கள் மூலம் பேசிக் கொள்ளும் ரக்சிதாவும், அவருடைய கணவரும் விரைவில் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நீங்க பாலாபிஷேகம் பண்ணுங்க, அவன் பாலூத்திட்டு போக போறான்.. மதுரை முத்து கவலை!

நீங்கள் பாலாபிஷேகம் பண்ணுங்க, அவன் பாலூத்திட்டு போகப் போறான் என மதுரை முத்து வீடியோ ஒன்றில் மிகவும் வருத்தமாக தெரிவித்துள்ளார். 

இவ்வளவு அழகாக பாடுவாரா அனுபமா பரமேஸ்வரன்? வைரல் வீடியோ..!

தமிழ் மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் பாடலை பாடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனுபமா

ஹாட்ஸ்டாரில் பிரபு சாலமனின் 'செம்பி' திரைப்படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை குவித்த இயக்குநர் பிரபு சாலமனின் "செம்பி" திரைப்படம், பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது

'சூர்யா 42' படத்தில் இணையும் இளவரசி நூர்ஜஹான்? 

 சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் இளவரசி நூர்ஜஹான் இணைந்துள்ளதாக தகவல் .

தளபதி விஜய் மகன் சஞ்சயின் முதல் படம் ஆரம்பம்.. வைரல் வீடியோ

 தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் முதல் படம் குறித்த தகவல் வெளியாகி அது குறித்த வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.