அந்த சவுண்டு ஜெயிக்கும். பிக்பாஸ் பரணி குறிப்பிட்டது யாரை?

  • IndiaGlitz, [Monday,July 17 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறியதாக கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட பரணி, இந்த வாரம் கமலுடன் கலந்துரையாடினார். இருவரும் ஒரே ஊர்க்காரரக்ள் என்பதால் பேச்சில் ஒரு அந்நியோன்யம் தென்பட்டது.
தன்னை சக போட்டியாளராக பார்க்காமல் இருந்தால் கூட பரவாயில்லை, சக மனிதராக கூட பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டிய பரணி, அந்த வீட்டில் தலைவர் பேச்சை கேட்பதா? அல்லது தலைவர் ஆகப்போகிறவர் பேச்சை கேட்பதா? என்பதில் தனக்கு குழப்பம் ஏற்பட்டதாக கூறினார்.
மேலும் அங்கிருந்த 30 கேமிராக்கள் கூட தன்னை எந்தவிதத்திலும் பயமுறுத்தவில்லை என்றும் தன்னால் அங்கிருந்த பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று அங்கிருந்தவர்கள் தன் காதுபடவே பேசியதை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் பரணி மிக வருத்தத்துடன் பேசினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் ஜெயிக்க வாய்ப்பு இருக்கின்றது என்று கமல் கேட்க, 'அதற்கு நான் வெளியேறும் போது ஒரே ஒரு குரல் மட்டும் 'பை பரணி' என்று கூறியது. அந்த குரலுக்குரியவர் ஜெயிப்பார் என்று கூறினார். அந்த குரலுக்குரியவர் ஓவியா என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலியை தான் உடன்பிறந்த தங்கை போல் நினைத்ததாகவும், அவர் கூட தான் வெளியேறுவதையே விரும்பியதாகவும் கூறிய பரணி, திருமணமாகி சென்ற தங்கையாக அவரை நினைத்து மன்னித்துவிட்டதாகவும் பரணி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டதால் பரணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நேயர்கள் பலர் எதிர்பார்த்தனர். இருப்பினும் சொந்த ஊர்க்காரராக இருந்தாலும் விதி, விதிதான் என்ற வகையில் கமல், பரணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தரவில்லை. இருப்பினும் பரணி பேசிய பல இடங்களில் கமல் கைதட்டி அவரை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷின் 'மாரி 2' குறித்த மகிழ்ச்சியான செய்தி

தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான வெற்றிப்படம் 'மாரி'. இந்த படத்தின் 2ஆம் பாகம் மிக விரைவில் உருவாகவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது.

அரசியலை நோக்கி நகர்த்தப்படுகிறாரா கமல்ஹாசன்?

தமிழக அரசியலில் சினிமா நடிகர்களின் ஆதிக்கம் இருந்தது போல் மற்ற மாநிலங்களில் இருந்திருக்குமா? என்பது சந்தேகமே.

பிக்பாஸ் வின்னர் யார்? கடுப்புடன் கணித்த நமீதா

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தபோதிலும், தமிழகத்தில் மட்டும் சுமார் 4 கோடி பேர் பார்க்கும் அளவிற்கு அந்த நிகழ்ச்சி பிரபலம் ஆகிவிட்டது.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் ஆதரவு

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் லண்டனில் 'நேற்று இன்று நாளை' என்ற இசை நிகழ்ச்சியை நடத்தியபோது அவர் தமிழ்ப்பாடல் மட்டுமே பாடியதாக குற்றம் சாட்டி லண்டன்வாழ் வட இந்திய ரசிகர்கள் நிகழ்ச்சி முடியும் முன்பே வெளியேறியதாக செய்திகள் வெளிவந்தது.

ஒரே படத்தில் உச்சத்தை தொட சிம்புவுக்கு அரிய வாய்ப்பு

சிம்பு நடித்த 'AAA' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து அவர் சேர்த்து வைத்திருந்த இத்தனை ஆண்டுகால நல்ல பெயரை ஒரே படம் தகர்த்தெறிந்துவிட்டது.