close
Choose your channels

திடீரென பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் கதிரவன். தனலட்சுமி அப்செட்

Thursday, November 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் மாறிமாறி வழக்குகள் தொடுக்கப்படுவதும், வழக்குகள் தொடர்ந்த மற்றும் தொடுக்கப்பட்டவர்களுக்கு வழக்கறிஞர்கள் ஆஜராகி வருவதுமான காட்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தற்போது கதிரவன் வீட்டில் இருக்கும் பொருட்கள் சரியாக கழுவவில்லை என்றும் டீ காபி குடித்த கப்புகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது என்றும் வழக்கு தொடுக்க பிக்பாஸ் இடம் அனுமதி கேட்கிறார்.

இந்த வழக்கை கேப்டன் மைனா மீது தொடுக்க முடியாது என்பதால் பொதுநல வழக்காக அனைவர் மீதும் தாக்கல் செய்யுங்கள் என பிக்பாஸ் அறிவுரை கூறுகிறார். இதனையடுத்து இந்த வழக்கை பொதுநல வழக்கு தாக்கல் செய்ய அமுதவணனிடம் கதிரவன் கூறுகிறார். இதனை அடுத்து பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் இந்த வழக்கில் சம்பந்தப் படுவார்கள் என தெரிகிறது.

இதனை அடுத்து தட்டுகள்,கப்புகள் ஆகியவற்றை சரியாக கழுவி வருபவர்களும் இந்த வழக்கில் ஆஜராக வேண்டுமா? என தனலட்சுமி அப்செட் ஆகிவிடுவதோடு, இதெல்லாம் ஒரு வழக்கா? என கூறுகிறார். இந்த வழக்கு இன்றைய நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.